வெளிநாடுகளுக்குச் செல்ல காத்திருக்கும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை
வெளிநாடுகளுக்கு செல்லும் இலங்கையர்களுக்கு அவர்களுக்கு ஏற்படும் ஆபத்து குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளுக்கு செல்லும் இலங்கையர்களிடம் தங்களுக்கு தெரிந்தவர்களிடம் பொதிகளை வழங்குமாறு கூறினால் அதனை பெற்றுக் கொள்வதனை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
குவைத் செல்ல எதிர்பார்த்திருந்த பயணி ஒருவர் எதிர்கொண்ட சம்பவத்தையடுத்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையர்களுக்கு எச்சரிக்கை
குவைத் செல்ல எதிர்பார்த்தவருக்கு அறிமுகமான ஒருவர் பொதி ஒன்றை வழங்கி அதனை குவைத்தில் உள்ள நண்பரிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

அதனை உதவியாக செய்ய குறித்த பயணியும் ஏற்றுக்கொண்டுள்ளார். இந்த நிலையில் பொதியில் என்ன உள்ளதென ஆராய்வதற்கு குவைத் செல்ல காத்திருந்த பயணியின் மனைவி நடவடிக்கை எடுத்துள்ளார்.
அதனை திறந்து பார்த்த போது அதில் இருந்து பெருந்தொகை போதைப்பொருள் கண்டுபிக்கப்பட்டுள்ளது.
பொதிகளால் ஆபத்து
இதனை ஆராயாமல் கொண்டு சென்றிருந்தால் குறித்த நபர் கைது செய்யப்பட்டிருக்கலாம்.

இதனால் வெளிநாடுகளில் இருந்து வரும் போதும் வெளிநாடுகளுக்கு செல்லும் போதும் இவ்வகையாக பொதிகளை பெற்றுக்கொள்வதனை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மனைவியை பிரிந்ததில் சந்தோஷம் தான்... இரண்டாம் திருமணம் குறித்து நடிகர் பார்த்தீபன் ஓபன் டாக்! Manithan
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் நடிகைக்கும், இந்த பிரபலத்திற்கும் மறுமணமா?... வெளிவந்த தகவல் Cineulagam
ஜேர்மனியை பிரித்தானியா முதலான நாடுகளுடன் இணைக்கும் புதிய எரிவாயுக்குழாய் திட்டம் துவக்கம் News Lankasri