சிறுவர்கள், இளைஞர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்கள் மற்றும் இளைஞர், யுவதிகள் கோவிட் வைரஸால் பாதிக்கப்படும் அபாயம் அதிகளவில் காணப்படுவதாக ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் மரபணு உயிரியல் நிறுவனத்தின் பேராசிரியர் நீலிகா மளவிகே தெரிவித்துள்ளார்.
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் ஆய்வுகளுக்கமைய கோவிட் தொற்றுக்கு உள்ளாகும் சிறுவர்களில் மில்லியனில் 13 பேர் உயிரிழக்கின்றனர் என தெரியவந்துள்ளது.
அத்துடன், கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள 65 முதல் 74 வயதிற்குட்பட்டோரில் ஒரு மில்லியனில் 22,000 பேரும், 75 வயதுக்கு மேற்பட்டோரில் ஒரு மில்லியனில் 120,000 பேரும் உயிரிழக்கக்கூடும் என அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், மேற்கத்தேய நாடுகளில் கொரோனா தொற்று மற்றும் இறப்பு எண்ணிக்கை அதிகரித்துவருகின்ற போதிலும், அங்கு பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுப்பட்டு வருகின்றன.தற்போது பாடசாலைகளை திறக்காத 15 நாடுகளில் இலங்கையும் ஒன்றாகும் என பேராசிரியர் மளவிகே மேலும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இலங்கை மருத்துவ சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நோயெதிர்ப்பு குறைபாடு கொண்டுள்ள 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அல்லது 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மூன்றாவது தடுப்பூசியாக பைஸர், அஸ்ட்ராசெனெகா மற்றும் மொடர்னா தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என்று இலங்கை மருத்துவ சங்கம் குறிப்பிட்டுள்ளது.
மேலும், சைனோபாம் தடுப்பூசியின் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்ற, நோயெதிர்ப்பு குறைபாடு கொண்டுள்ள 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, இரண்டாவது தடுப்பூசி வழங்கப்பட்டு குறைந்தது 28 நாட்களுக்குப் பின்னர் மூன்றாவது தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என்றும் அச்சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த ராசியினர் உயிர் போகும் தருணத்திலும் நேர்மை தவறமாட்டார்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

வெறும் 4 துணிகள் தான் உள்ளது, அப்பா, அம்மா இல்லாமல்.. சரிகமப சீசன் 5 மேடையில் கண்ணீர்விட்ட இலங்கை பெண் சினேகா Cineulagam

போர் தொடர்பில் அப்படியே பலிக்கும் பாபா வங்காவின் கணிப்பு - ஈரான் இஸ்ரேல் போரில் வெற்றி யாருக்கு? News Lankasri
