நாட்டு மக்களுக்கு வைரஸ் தொற்று குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
நாட்டு மக்களுக்கு வைரஸ் தொற்று குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வைரஸ் தொற்றுக்கள் காரணமாக நாள் தோறும் 60 முதல் 70 சிறுவர்கள் வரையில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுகின்றனர்.
வைரஸ் தொற்றுக்களிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு சுகாதார வழிமுறைகள் பின்பற்ற வேண்டுமென தேசிய தொற்று நோய் விஞ்ஞான பிரிவு மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

வைரஸ் தொற்று தாக்கம்
காய்ச்சல் உள்ளிட்ட வைரஸ் தொற்றுக்கள் நாடு முழுவதிலும் பரவி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

வைரஸ் காய்ச்சல், சளிக்காய்ச்சல், டெங்கு மற்றும் கோவிட் உள்ளிட்ட வைரஸ் தொற்று தாக்கம் தொடர்பில் அடிக்கடி பதிவாகி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
கோவிட் தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள மக்கள் பயன்படுத்திய சுகாதார வழிமுறைகள் தொடர்ந்தும் பின்பற்றப்பட்டால் வைரஸ் தொற்றுக்களிலிருந்து பாதுகாத்துக்கொள்ள முடியும் என மருத்துவ அதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார்.
உலகக் கோப்பையில் மெஸ்ஸியுடன் நடந்த மோதல்: இங்கிலாந்து வீரர் ஜூட் பெல்லிங்ஹாம் விளக்கம் News Lankasri
இலங்கைத் தமிழ் ரொம்ப பிடிக்கும் -சிட்னியில் ரசிகர்களை கவர்ந்த த்ரிஷா... விஜய் குறித்து ரசிகர் எழுப்பிய கேள்வி! Manithan