மத்திய கிழக்கில் போர் பதற்றத்தை தணிக்க முயற்சிக்கும் நாடு
மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் போர் பதற்றத்தை தணிக்கும் நோக்கில் சீனா மத்தியஸ்த முயற்சியில் இறங்கியுள்ளது.
சீன வெளியுறவு அமைச்சர் வேங் யீ Wang Yi, பிராந்தியத்தில் சமரச பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க சிறப்பு தூதுவரை அனுப்புவதாக அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பு சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரக வெளியுறவு அமைச்சர்களுடன் நடைபெற்ற தனித்தனி தொலைபேசி உரையாடல்களுக்கு பின்னர் இந்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது.
சீன வெளிவிவகார அமைச்சு
இந்த விடயம் தொடர்பில் சீன வெளிவிவகார அமைச்சு அறிக்கை வெளியிட்டுள்ளது.

சவுதி அரேபிய வெளியுறவு அமைச்சர் பைசால் பின் பர்ஹான் அல் சாவுடுடன் பேசிய போது, “பொறுமையும் தன்னடக்கமும் கடைப்பிடித்து, அமைதியான முறையில் கருத்து வேறுபாடுகளை தீர்க்க முயற்சிக்கும் ரியாதின் அணுகுமுறையை சீனா பாராட்டுகிறது” என வேங் யீ தெரிவித்துள்ளார்.
அதேபோல், ஐக்கிய அரபு அமீரக வெளியுறவு அமைச்சர் அப்துல்லா பின் சயட் பின் சுல்தான் அல் நாயனுடன் நடைபெற்ற உரையாடலில், பொதுமக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் “சிவப்பு கோடு” என சீனா கருதுகிறது என்றும், அத்தகைய நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்றும் வலியுறுத்தியுள்ளார்.
மத்திய கிழக்கில் நிலவும் பதற்ற நிலை மேலும் மோசமடையாத வகையில், அமைதி மற்றும் உரையாடல் வழியே தீர்வை காணும் முயற்சிகளில் சீனா தீவிரமாக ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
சீனாவின் இந்த விசேட சமாதான பிரதிநிதி யார் எப்பொழுது பேச்சுவார்த்தை நடத்துவார் என்பது குறித்த தகவல்கள் இன்னமும் வெளியிடப்படவில்லை.
திடீரென கண்ணீர்விட்டு அழுத சோழன், அதைப்பார்த்த நிலா செய்த விஷயம்.. அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam
குணசேகரன் ஜாமினுக்கு வந்த சிக்கல், செக் வைத்தது யார் தெரியுமா?... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam