முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத் மறைவு!வைகோ இரங்கல்
முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது வாழ்விணையர், 11 இராணுவ வீரர்கள் குன்னூரில் ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்தது அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. அவரது இழப்பு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும் என மறுமலர்ச்சி தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ தனது இரங்கல்களை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இந்திய இராணுவத்தின் 27 ஆவது தலைமைத் தளபதியாக 2016 ஆம் ஆண்டு பொறுப்பேற்ற ஜெனரல் பிபின் ராவத், 2019 இல் இந்தியாவின் முதல் முப்படைத் தளபதி தலைமைப் பொறுப்பை ஏற்றார்.
எல்லைப் பாதுகாப்புப் பணிகளில் மிகுந்த ஈடுபாடு கொண்ட ஜெனரல் பிபின் ராவத், ஐ.நா. அமைதிப்படையில் பன்னாட்டு இராணுவ வீரர்கள் கொண்ட படைக்கு தலைமை வகித்து, காங்கோ நாடு சென்றார். பல களங்களில் அவரது போர்த்திறனும், துணிச்சலும் வெளிப்பட்டு இருக்கின்றன.
இந்திய இராணுவத்தை நவீனமயமாக்கவும், இராணுவக் கருவிகளை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதிலும் அவர் ஆற்றிய பங்கு மகத்தானது.ஜெனரல் பிபின் ராவத் தனது பணிக் காலத்தில் திறம்படப் பணியாற்றியதால், உயரிய விருதுகளைப் பெற்றுள்ளார்.
தமிழ் நாட்டில், முப்படைத் தலைமைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் இராணுவ வீரர்கள் உள்ளிட்ட 13 பேர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்ததற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்...
வீட்டு வாசலில் விழுந்த 2 உடல்கள்.. பதறி போன காட்டேரி மக்கள்.. என்ன நடந்தது குன்னூரில்?
தமிழகத்தில் இந்திய முப்படை தளபதி பயணித்த ஹெலிகொப்டர் விபத்து! - 10 பேர் பலி

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

சனி வக்ர பெயர்ச்சியால் அடுத்த18 நாட்களில் இந்த 3 ராசிக்கும் வரப்போகும் போராபத்து....சனியால் அழிவு நிச்சயம்! Manithan

முன்னாள் மனைவி மீது பொய் வழக்கு போட்ட இமான்! குழந்தைகள் பாஸ்போர்ட் சர்ச்சை பற்றி அதிர்ச்சி தகவல் Cineulagam

4 நாளிலும் செம வசூல் வேட்டை நடத்திய சிவகார்த்திகேயனின் டான்- தமிழகத்தில் மட்டும் இவ்வளவா? Cineulagam

KGF 2 படத்தை பார்த்துவிட்டு இயக்குனர் ஷங்கர் போட்ட பதிவு- என்னமா சொல்லியிருக்கிறார் பாருங்க Cineulagam

நாட்டின் ஜனாதிபதி புடினையே முதுகில் குத்திய ரஷ்யா! உக்ரைன் போரில் திருப்புமுனை உறுதி... முக்கிய தகவல் News Lankasri
மரண அறிவித்தல்
திருமதி சரோஜினிதேவி பாலேந்திரா
தாவடி, எசன், Germany, London, United Kingdom, Birmingham, United Kingdom
11 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் தயானந் பாலசுந்தரம்
துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada
16 May, 2021
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022