மலையக பெருந்தோட்ட மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு
பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று (14) காலை 7 மணிக்கு ஆரம்பமாகி தற்போது இடம்பெற்று வருகின்றது.
நுவரெலியா
நுவரெலியா மாவட்டத்தில் வாக்களிப்பு மாலை 04.00 மணி வரை சுமூகமாக இடம் பெற்றதாகவும் 70% சதவீதமான வாக்குகள் அளிக்கப்பட்டதாகவும் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி / மாவட்ட செயலாளர் நந்தன கலபட தெரிவித்துள்ளார்.

நுவரெலியா மாவட்டத்தில் இன்று (14) நண்பகல் 12 மணி வரையான காலப்பகுதியில் 40% சத வீத வாக்கு பதிவு இடம்பெற்றுள்ளதாக நந்தன கலபட தெரிவித்துள்ளார்.
குறிப்பாக மலையகத்தை பொறுத்தவரை பெருந்தோட்ட மக்கள் உட்பட அனைவரும் வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்று தங்களுடைய வாக்குகளை பயன்படுத்துவதை காணக்கூடியதாக இருக்கின்றது.

இதேவேளை, காலை 8 மணி வரையான காலப்பகுதியில் நுவரெலியா மாவட்டத்தில் 7% சத வீத வாக்கு பதிவு இடம்பெற்றுள்ளதாக நந்தன கலபட தெரிவித்துள்ளார்.
மேலும், நுவரெலியா மாவட்டத்தில் மாலை வேளையில் சீரற்ற காலநிலை இருக்கும் என்பதால் காலை வேளையிலேயே மக்கள் வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்களிக்கமாறும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
செய்தி-திருமால்





பிரித்தானிய அரசியலில் மாறிய காட்சிகள்: வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார் முன்னாள் துணைப்பிரதமர் News Lankasri
விபத்தில் சிக்கிய சோழன்.. மருத்துவமனையில் அனுமதி.. கதறி அழும் நிலா.. அய்யனார் துணை சீரியல் Cineulagam
ஜனனி செய்த காரியம், குணசேகரன் மீது வருத்தத்தில் ஈஸ்வரி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் Cineulagam
புதிய சீரியலில் ஒன்றாக நடிக்கப்போகும் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் நடிகர்கள்... யார் தெரியுமா? Cineulagam
50 ஆண்டுகளின் பின் சனி ஜெயந்தியில் உருவாகும் ராஜயோகம்: இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan