கெஹலியவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை : சித்தார்த்தனின் முடிவு (Video)
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளிக்க வேண்டும் என்பது எனது தனிப்பட்ட கருத்து என நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
அரவரது இல்லத்தில் இன்று (03.09.2023) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு பதில் அளித்துள்ளார்.
இது தொடர்பில் இவர் மேலும் தெரிவிக்கையில்,
சுகாதார அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையானது எதிர்வரும் 06, 07, 08ஆம் திகதிகளில் விவாதத்திற்கு எடுக்கப்பட்டு, 08ஆம் திகதி வாக்களிப்பு நடைபெறவிருக்கிறது. இந்த வாக்களிப்பில் நாங்கள் என்ன செய்வது என்பது தொடர்பாக இதுவரை கலந்துரையாடப்படவில்லை.
மருந்துகள் கொள்வனவு செய்யும் விடயங்களில் ஊழல்
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழரசுக் கட்சி மற்றும் ஏனைய தமிழ் கட்சிகளுடன் கலந்துரையாடி முடிவெடுக்க வேண்டும். தனிப்பட்ட விதத்தில் என்னைக் கேட்டால், சுகாதாரத்துறை மிகவும் பின்னடைவு ஒன்றை சந்தித்திருக்கின்றது. சுகாதாரத் துறைக்கு எதிராக பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.
இப்போது கூட மருந்துகள் மற்றும் உபகரணங்கள் கொள்வனவு செய்யும் விடயங்களில் மிகப்பெரிய ஊழல் நடந்து கொண்டிருப்பதாக அறிய முடிகிறது.
ஆகவே இது சம்பந்தமாக நாங்கள் கட்டாயமாக கவனம் செலுத்தி, மிகத் தெளிவான ஒரு முடிவெடுத்து இந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்கத்தான் வேண்டும் என்பது என்னுடைய சொந்த கருத்து.
இருந்தாலும் மற்ற கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கலந்து பேசி ஒரு முடிவை எடுப்போம் என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
![தையிட்டி விகாரை : என்ன செய்யலாம்](https://cdn.ibcstack.com/article/eafa3708-ce84-4e22-b6a6-518c2b23980b/25-67a890674e00d-md.webp)