மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவராக அமைச்சர் வியாழேந்திரன் நியமனம் (Photos)
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவராக வர்த்தக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதற்கான நியமனத்தினை வழங்கியுள்ளார்.
அபிவிருத்திக்குழு தலைவர்
ஏற்கனவே மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவர்களாக இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தன், கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளர்.

இந்நிலையில், இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனும் மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஏற்கனவே ஏறாவூர்ப்பற்று, மண்முனை வடக்கு, மண்முனை தென் மேற்கு,போரதீவுப்பற்று உட்பட சில பிரதேச செயலகங்களின் அபிவிருத்திக்குழு தலைவராக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சீரியல் நடிகர் வெற்றி வசந்த், வைஷு வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு... சோகத்தில் குடும்பம், பிரபலம் பதிவு Cineulagam
கடந்த வாரம் வாட்டர்மெலன் ஸ்டார்.. இந்த வாரம் யார் எலிமினேஷன் தெரியுமா? வெளிவந்த உறுதியான தகவல் Cineulagam
ரஷ்ய பாதுகாப்புத்துறை அதிகாரிக்கு இணையத்தில் கிடைத்த தோழி: பின்னர் காத்திருந்த அதிர்ச்சி News Lankasri