கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்! வீசா பிரச்சினைக்கும் புதிய தீர்வு
விமான நிலையத்தில் வீசா கவுண்டர்கள் 12 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
பொது பாதுகாப்பு அமைச்சில் நேற்று (09) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
வீசா பிரச்சினை
வீசா பிரச்சினைக்கு நீதிமன்ற தீர்வு கிடைக்கும் வரை, வருகை வீசா (on arrival visa) வழங்கும் முறை நடைமுறைபடுத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் ஒரே நேரத்தில் பல விமானங்கள் வரும்போது, வீசா வழங்கப்படும் கவுண்டர்களில் வரிசைகள் இருப்பதாகவும், இந்த நிலையை குறைக்க, தற்போதுள்ள கவுண்டர்களுக்கு மேலதிகமாக 12 கவுண்டர்கள் நிறுவப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முன்னதாக ஒன்லைன் வீசா வழங்கும் வகையில் விமான நிலையத்தில் உருவாக்கப்பட உள்ள புதிய முறையினால் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு,உச்ச நீதிமன்றில் அடிப்படை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
நாடாளுமன்ற உறுப்பினர்களான சம்பிக்க ரணவக்க, ரவுப் ஹக்கீம் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் இந்த விடயம் தொடர்பில் உச்ச நீதிமன்றில் அடிப்படை மனுவொன்றை தாக்கல் செய்திருந்தனர்.
மனு தாக்கல்
இந்த வீசா முறைமையினால் நாட்டின் முக்கிய தகவல்கள் கசியும் அபாயம் காணப்படுவதாகவும் இது தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும் எனவும் தெரிவித்துள்ளனர்.

தனிப்பட்ட ரீதியில் இந்த மனுக்களை குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாக்கல் செய்யபட்டது.
மேலும் குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர், சுற்றுலாத்துறை அமைச்சர், சட்ட மா அதிபர் மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சர் ஆகியோர் இந்த மனுவின் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
இந்நிலையிலே வீசா பிரச்சினைக்கு நீதிமன்ற தீர்வு கிடைக்கும் வரை, வருகை வீசா (on arrival visa) வழங்கும் முறை நடைமுறைபடுத்தப்படும் என்று பொது பாதுகாப்பு அமைச்சர் கூறியுள்ளார்.
ட்ரம்ப் - சவுதி மெகா ஒப்பந்தம்... தூக்கம் தொலைத்த இஸ்ரேல்: ஆபத்தான போர் விமானங்கள் விற்பனை News Lankasri
மீனாவிற்கு ஷாக் கொடுத்த செந்தில் என்ன செய்யப்போகிறார், பெரிய சிக்கலில் மயில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட் Cineulagam
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
பிரித்தானியாவின் மிகப்பெரிய பணக்காரர் காலமானார்: வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கிய இந்தியர் News Lankasri