யாழ்.கோண்டாவில் பகுதியில் வன்முறை கும்பல் அட்டூழியம் (PHOTOS)
யாழ். கோண்டாவில் இராமகிருஷ்ண மகா வித்தியாலயத்துக்கு அண்மையாக உள்ள வர்த்தகரொருவரின் வீட்டு வளாகத்துக்குள் புகுந்த கும்பலொன்று அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளது.
குறித்த கும்பல் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை எடுத்துச் சென்று உப்புமடச் சந்தியில் வைத்து சேதப்படுத்தி விட்டுச்சென்றுள்ளது.
இந்த சம்பவம் இன்று அதிகாலை 5.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
3 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஓட்டோவில் வந்த வன்முறைக் கும்பலே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக கோப்பாய் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
புன்னாலைக்கட்டுவன் சந்தியில் அலைபேசி வர்த்தக நிலையத்தை நடத்தி வருபவரின் வீட்டிலேயே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.





