விதிமுறை மீறல்களில் சிக்கும் வாகனங்கள்: நாமல் விடுக்கும் கோரிக்கை

Anura Kumara Dissanayaka vehicle imports sri lanka Clean Sri lanka
By Dharu Jan 07, 2025 05:47 PM GMT
Report

பொது மக்களுக்கு ஆபத்து ஏற்படாத வகையில் பேருந்துகள் மற்றும் முச்சக்கர வண்டிகளை அலங்கரிப்பதற்கு குறிப்பிட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு அனுமதி வழங்கப்பட வேண்டுமென சிறிலங்கா பொதுஜன பெரமுனவின்(SLPP) தேசிய அமைப்பாளர் நாமல் ராசபக்ச(Namal Rajapaksa) தெரிவித்துள்ளார்.

பேருந்துகள் மற்றும் முச்சக்கர வண்டிகளை அலங்கரிப்பது ஒரு தனித்தொழில் மற்றும் கலை ஆகும் எனவும் நாமல் கூறியுள்ளார்.

மேலும், பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத பட்சத்தில் பேருந்து மற்றும் முச்சக்கர வண்டிகளை அலங்கரிப்பதில் பிரச்சினை இல்லை எனவும் அவர், கூறியுள்ளார்.

யாழ்ப்பாணத்தின் ஊடாக இந்திய விமான நிலையத்தை வேவு பார்ப்பதில் சீனா இரகசிய முயற்சி

யாழ்ப்பாணத்தின் ஊடாக இந்திய விமான நிலையத்தை வேவு பார்ப்பதில் சீனா இரகசிய முயற்சி

போக்குவரத்து விதிகள்

போக்குவரத்து விதிகளை மீறும் மற்றும் பொதுமக்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தும் சட்டங்களும் அவ்வாறே நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமெனவும் நாமல் கோரிக்கை விடுத்துள்ளார்.

விதிமுறை மீறல்களில் சிக்கும் வாகனங்கள்: நாமல் விடுக்கும் கோரிக்கை | Violation Of Vehicle Decoration Regulations

எவ்வாறாயினும், பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் அலங்கார நடவடிக்கைகளில் ஈடுபடும் பேருந்துகள் மற்றும் முச்சக்கர வண்டிகளுக்கு நிவாரணம் வழங்குமாறு கோரிக்கை விடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

க்ளீன் ஸ்ரீலங்கா' பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, முறையற்ற அலங்கரிப்புடைய தனியார் போக்குவரத்து நடத்துநர்கள் மற்றும் முச்சக்கர வண்டி நடத்துபவர்கள் மீது பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

எனினும் இந்த செயல்பாடு பெரும் விமர்சனங்களை ஏற்படுத்தி வருகிறது.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தனது அரசாங்கத்தின் மிக முக்கியமான திட்டமான சுத்தமான இலங்கையை 2025 ஆம் ஆண்டுக்கு முன்னதாக ஆரம்பித்து வைத்தார்.

ருமேனிய- பல்கேரிய எல்லையை தாண்டிய முதலாவது பிரமுகரான தெரு நாய்

ருமேனிய- பல்கேரிய எல்லையை தாண்டிய முதலாவது பிரமுகரான தெரு நாய்

மோட்டார் போக்குவரத்துச் சட்டம்

இந்த பொருட்கள் பொதுமக்களுக்கு ஆபத்தை விளைவிப்பதாகவும், மோட்டார் போக்குவரத்துச் சட்டத்தை மீறுவதாகவும் கூறி, அலங்காரங்களாக பயன்படுத்தப்படும் கூடுதல் உபகரணங்களை அகற்றுவதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதனால் வாகனங்களில் உள்ள அலங்கார கொம்புகள், பிரகாசமான விளக்குகள் என அனைத்து கூடுதல் அம்சங்களும் அகற்றப்பட்டு வருகின்றன.

விதிமுறை மீறல்களில் சிக்கும் வாகனங்கள்: நாமல் விடுக்கும் கோரிக்கை | Violation Of Vehicle Decoration Regulations

 மேலும், பேருந்துகளில் பயணிக்கும் இரகசிய பொலிஸார், ஓட்டுநர்களால் முன்னெடுக்கப்படும் நெடுஞ்சாலைக் குறியீடு மீறல்களை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

எனினும், தனியாருக்குச் சொந்தமான பேருந்து நடத்துநர்கள் ஒழுக்கம் மற்றும் சாலைப் பாதுகாப்பைக் கடைப்பிடிப்பதை உறுதிசெய்ய நெடுஞ்சாலைக் குறியீட்டை கடுமையாக நடைமுறைப்படுத்துவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டில் 2,359 பேர் வாகன விபத்துக்களால் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ரஷ்யப்படையில் வலிந்து இணைக்கப்பட்டுள்ளவர்களை மீட்டுத்தர கோரி அநுர தரப்பிற்கு தாய்மார்கள் கடிதம்

ரஷ்யப்படையில் வலிந்து இணைக்கப்பட்டுள்ளவர்களை மீட்டுத்தர கோரி அநுர தரப்பிற்கு தாய்மார்கள் கடிதம்

முதல் 11 மாதங்கள்

2024 ஆம் ஆண்டின் முதல் 11 மாதங்களில் அரசு சாரா பேருந்துகள் சம்பந்தப்பட்ட விபத்துகளில் 198 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விதிமுறை மீறல்களில் சிக்கும் வாகனங்கள்: நாமல் விடுக்கும் கோரிக்கை | Violation Of Vehicle Decoration Regulations

'தூய்மையான இலங்கை’ பிரசாரமானது நாட்டின் ஆழமாக அழிந்துபோன மற்றும் சீரழிந்துள்ள சமூக சூழல் கட்டமைப்பை மீட்டெடுப்பதான  இலக்கை கொண்டது என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

மேலும், உயிர்கள் மீதான கரிசனையை வளர்ப்பது அவசிய தேவை எனவும் கூறியுள்ளார்.

எனினும், நமது நாட்டில் சாலை விபத்துக்களால் சராசரியாக நாளொன்றுக்கு சுமார் ஏழு பேர் உயிரிழக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு

05 Oct, 2021
25ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Southend, United Kingdom

12 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, கனகராயன்குளம், சென்னை, India, திருச்சி, India

19 Sep, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு, அனலைதீவு 6ம் வட்டாரம், Ontario, Canada

20 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

20 Sep, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், துன்னாலை, வல்வெட்டி, துணுக்காய், கொழும்பு, வவுனியா

20 Sep, 2015
மரண அறிவித்தல்

மட்டுவில், Stockholm, Sweden

30 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
கண்ணீர் அஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Villeneuve-Saint-Georges, France

20 Sep, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

17 Sep, 2000
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

28 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில், Vaughan, Canada

19 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Toronto, Canada

14 Sep, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

12 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Ikast, Denmark, Toronto, Canada

17 Sep, 2021
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, Scarborough, Canada

13 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Wembley, United Kingdom

13 Sep, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Bushey, United Kingdom

13 Sep, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US