கொழும்பில் ஜனாதிபதிக்கு பகிரங்க ஆதரவை அறிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றிக்கு ஆதரவு வழங்குவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் நேற்று [18.19.தெரிவித்துள்ளார்.
கொழும்பு பிளவர் வீதியில் அமைந்துள்ள ஜனாதிபதியின் அரசியல் காரியாலயத்தில் சற்றுமுன்னர் நடைபெற்ற ஊடக மாநாட்டில் அவர் இதனை அறிவித்துள்ளார்.

இந்நிலையில், இலங்கை தமிழரசுக் கட்சியின் தரப்பு சஜித் பிரேமதாசவுக்கு தனது ஆதரவை வெளியிட்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில் வினோ எம்.பி தனது தனிப்பட்ட ஒரு நிலைப்பாட்டை வெளியிட்டுள்ளமை பெரும் பேசுபொருளாகியுள்ளது.
இங்கு தமிழர் தரப்பில் பொதுவேட்பாளர் என ஒரு நிலைப்பாடு கொண்டுவரப்பட்டுள்ளதோடு சில அரசியல் முக்கியஸ்தர்கள் தென்னிலங்கை அரசியல் தலைமைகளை நோக்கி நகர்வது விசனங்களையும் எழுப்பியுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பிரித்தானியாவின் மில்லியனர் எண்ணிக்கையில் கடும் வீழ்ச்சி - வெளிநாடுகளில் குடியேறும் செல்வந்தர்கள் News Lankasri
இந்தியாவில் ரசாயன தாக்குதல் நடத்த பாகிஸ்தான் திட்டம்? - ஆபத்தான ரிஸின், 350 கிலோ வெடிமருந்து பறிமுதல் News Lankasri