வின்சன் புளோறன்ஸ் ஜோசப்பின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் (Photos)
ஊடக செயற்பாட்டாளரும், மொழிபெயர்ப்பாளரும் இலக்கியவாதியுமான அமரர் வின்சன் புளோறன்ஸ் ஜோசப்பின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.
யாழ்.ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் இன்று திங்கட்கிழமை(27) காலை குருநகர் புதுமை மாதா கோவில் கிழக்கு வீதியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இந்த நினைவேந்தல் இடம்பெற்றது.
நினைவேந்தலின் போது அவரது உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.
நினைவுப்பேருரை
நினைவேந்தலில் நினைவுப்பேருரையானது அரசியல் ஆய்வாளர் ம.நிலாந்தன் "தமிழ் ஊடகப்பரப்பில் மொழிபெயர்ப்பியல் கலை" எனும் பெயரில் முன்னெடுக்கப்பட்டது.
குடும்ப உறவினர்கள் மற்றும் சக ஊடக நண்பர்கள் மற்றும் நட்பு வட்டார உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
பாடசாலை மாணவர்களின் வருகை தொடர்பில் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வெளியிட்ட தகவல் |