ஜனாதிபதித் தேர்தல், இடம்பெறுவது சந்தேகத்துக்குரியது: விமல் வீரவன்ச சாடல்

Ranil Wickremesinghe Wimal Weerawansa Sri Lanka
By Dharu Oct 12, 2023 10:25 PM GMT
Report

உள்ளூராட்சிமன்றத் தேர்தலை பிற்போட்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஜனாதிபதி தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் ஆகியவற்றை பிற்போடுவது கடினமானதல்ல என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், எதிர்வரும் ஆண்டு ஜனாதிபதி தேர்தல்,பாராளுமன்றத் தேர்தல் இடம்பெறுவது சந்தேகத்துக்குரியது எனவும், தேர்தலுக்காகவும் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய நிலை தோற்றம் பெற்றுள்ளது என்றும் கூறியுள்ளார்.

பொரளையில் உள்ள இலங்கை கம்யூனிச கட்சி காரியாலயத்தில் நேற்று (12.10.2023) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

வடக்கு - தெற்கு என பிரித்துப் பார்ப்பதே பிரச்சினை: கடற்றொழிலாளர்கள் விசனம்

வடக்கு - தெற்கு என பிரித்துப் பார்ப்பதே பிரச்சினை: கடற்றொழிலாளர்கள் விசனம்

அத்தியாவசிய சேவை கட்டணங்கள் உயரவு

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

பொருளாதார பாதிப்புக்கு தீர்வு காண்பதாக குறிப்பிட்டுக் கொண்டு ஜனாதிபதி ரணில் விக்ரசிங்க உலகத்தை வலம் வருகிறார்.

ஆனால் பொருளாதார நெருக்கடிக்கு நிலையான தீர்வு எட்டப்படவில்லை.பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மென்மேலும் நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் அரசாங்கம் தீர்மானங்களை முன்னெடுக்கிறது.

ஜனாதிபதித் தேர்தல், இடம்பெறுவது சந்தேகத்துக்குரியது: விமல் வீரவன்ச சாடல் | Vimal Weerawansa S Opinion On The Election

சர்வதேச நாணய நிபந்தனைக்கு அமைய வரி உட்பட அத்தியாவசிய சேவை கட்டணங்கள் உயர்வடைந்துள்ளன. மின்கட்டணம் முறையற்ற வகையில் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் மின்கட்டணத்தை அதிகரிக்க மின்சார சபை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் யோசனை முன்வைத்துள்ளது.

மின்சார சபை எதிர்கொள்ளும் நட்டத்தை முகாமைத்துவம் செய்துக்கொள்வதற்காகவே மின்கட்டணம் முறையற்ற வகையில் அதிகரிக்கப்படுகிறது.மின்சார சபையின் ஊழல் மற்றும் வீண் செலவுகளை கட்டுப்படுத்தினால் முறையற்ற மின்கட்டண அதிகரிப்பை தடுக்கலாம்.

முல்லைத்தீவில் வயோதிபர் மீது யானை தாக்குதல்

முல்லைத்தீவில் வயோதிபர் மீது யானை தாக்குதல்

தேர்தல் ஊடாகவே ஆட்சிமாற்றம்

தேர்தல் ஊடாகவே ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்த முடியும். இதனால் தான் காலத்துக்கு காலம் தேர்தல் நடத்தப்படுகிறது.

நாட்டு மக்கள் போராட்டத்தின் ஊடாக ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தினார்கள்.

அதுவும் தற்போது ஸ்திரமற்றதாக காணப்படுகிறது.மக்களின் தேர்தல் உரிமையும் பறிக்கப்பட்டுள்ளது. பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் தேர்தல் முறைமையை திருத்தியமைக்கும் வகையில் அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தல், இடம்பெறுவது சந்தேகத்துக்குரியது: விமல் வீரவன்ச சாடல் | Vimal Weerawansa S Opinion On The Election

தேர்தலை பிற்போடுவதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க திறமையானவர். பெண் பிரநிதித்துவத்தை அதிகரிப்பதாக குறிப்பிட்டுக் கொண்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மாகாண சபைத் தேர்தல் முறைமையை திருத்தம் செய்தார்.

இறுதியில் மாகாண சபைத் தேர்தல் காலவரையறையின்றி பிற்போடப்பட்டது. உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர் எண்ணிக்கையை வரையறை செய்வதாக குறிப்பிட்டுக் கொண்டு எல்லை நிர்ணயம் புதிதாக வகுக்கப்பட்டது.

தற்போது உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிற்போடப்பட்டுள்ளது.

இவ்வாறான பின்னணியில் தேர்தல் முறைமையை திருத்தம் செய்யும் வகையில் அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகள் அமைப்பின் சில பகுதிகள் ஐரோப்பிய நாடுகளில் செயற்படுவதாக கூறும் சரத் வீரசேகர

விடுதலைப் புலிகள் அமைப்பின் சில பகுதிகள் ஐரோப்பிய நாடுகளில் செயற்படுவதாக கூறும் சரத் வீரசேகர

எதிர்வரும் ஆண்டு ஜனாதிபதி தேர்தல்

மாகாண சபைத் தேர்தல்,உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போட்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஜனாதிபதி தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் ஆகியவற்றை பிற்போடுவது கடினமானதல்ல.

ஜனாதிபதித் தேர்தல், இடம்பெறுவது சந்தேகத்துக்குரியது: விமல் வீரவன்ச சாடல் | Vimal Weerawansa S Opinion On The Election

ஆகவே எதிர்வரும் ஆண்டு ஜனாதிபதி தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் இடம்பெறுவது சந்தேகத்துக்குரியதே.

தேர்தலுக்காகவும் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய நிலை தோற்றம் பெற்றுள்ளது. பொதுஜன பெரமுனவில் இருந்து விலகி நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் உறுப்பினர்களின் நாடாளுமன்ற உறுப்புரிமைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது எமக்கு எதிராக பொதுஜன பெரமுனவினால் சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது.” என கூறியள்ளார்.

ஆனந்தபுரச் சமரில் பயன்படுத்திய ஆபத்தான ஆயுதங்கள் காஸா களமுனைகளில் (Video)

ஆனந்தபுரச் சமரில் பயன்படுத்திய ஆபத்தான ஆயுதங்கள் காஸா களமுனைகளில் (Video)

நாட்டை விட்டு வெளியேறிய நீதிபதி சரவணராஜா தொடர்பில் புலனாய்வு பிரிவு வெளியிட்ட தகவல்

நாட்டை விட்டு வெளியேறிய நீதிபதி சரவணராஜா தொடர்பில் புலனாய்வு பிரிவு வெளியிட்ட தகவல்

5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், அத்தியடி, நல்லூர், கொழும்பு

28 Mar, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

நுணாவில், சாம்பல்தீவு

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US