வடக்கு - தெற்கு என பிரித்துப் பார்ப்பதே பிரச்சினை: கடற்றொழிலாளர்கள் விசனம்

Indian fishermen Jaffna Dinesh Gunawardena Sri Lanka Sri Lanka Fisherman
By Harrish Oct 12, 2023 09:55 PM GMT
Report

இலங்கையின் வடக்கு கடல் பரப்பில் கடற்றொழிலில் ஈடுபட இந்திய கடற்றொழிலாளர்களுக்கு அனுமதி வழங்குவது தொடர்பில் இலங்கை பிரதமர் தெரிவித்த கருத்துக்கு கடற்றொழிலாளர் சங்க தலைவர் ஒருவர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

தமிழக ஊடகம் ஒன்றிற்கு அக்டோபர் 6ஆம் திகதி வழங்கிய நேர்காணலில், இந்திய கடற்றொழிலாளர்களுக்கு உரிமம் வழங்கும் இந்தியாவின் முன்மொழிவு குறித்து ஊடகவியலாளர் ஒருவர் கேட்டபோது, பிரதமர் தினேஷ் குணவர்தன தனது தயார்நிலையை வெளிப்படுத்தியிருந்தார்.

விடுதலைப் புலிகள் அமைப்பின் சில பகுதிகள் ஐரோப்பிய நாடுகளில் செயற்படுவதாக கூறும் சரத் வீரசேகர

விடுதலைப் புலிகள் அமைப்பின் சில பகுதிகள் ஐரோப்பிய நாடுகளில் செயற்படுவதாக கூறும் சரத் வீரசேகர

“இதுத் தொடர்பில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம். ஜனாதிபதி இந்தியா வந்தபோது இதுத் தொடர்பில்கலந்துறையாடினார்.” என தெரிவித்திருந்தார்

இந்த திட்டத்தை பரிசீலிப்பீர்களா என, ஊடகவியலாளர் கேட்டபோது, “ஆம் அதற்குத் தயார். இரண்டு தரப்பு கடற்றொழிலாளர்களின் ஒத்துழைப்பு அவசியம். இது அரசுகள் தொடர்புடைய விடயமல்ல. கடற்றொழிலாளர்கள் தொடர்புடைய விடயம். இந்த விவகாரத்தில் புரிந்துணர்வு அவசியம்.” எனத் தெரிவித்திருந்தார்.

வடக்கு - தெற்கு என பிரித்துப் பார்ப்பதே பிரச்சினை: கடற்றொழிலாளர்கள் விசனம் | India Sri Lanka Fisherman Issue Dinesh Gunawardena

யாழ்ப்பாணத்தில் ஒக்டோபர் 11ஆம் திகதி நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வடமாகாண கடற்றொழில் வலையமைப்பின் செயலாளர் என். எம். பிரதமரின் அறிக்கைக்கு பதிலளித்த ஆலம், இலங்கை அரசு வடக்கு கடற்றொழிலாளர்களையும், தென்பகுதி கடற்றொழிலாளர்களையும் இரண்டு விதமாக நடத்துவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

“வட பகுதியில் இருக்கும் கடற்றொழிலாளர்களை ஒரு கண்ணோட்டத்திலும் தென்பகுதியில் இருக்கும் தங்களுடைய கடற்றொழிலாளர் சமூகத்தை ஒரு கண்ணோட்டத்திலும் பார்க்கின்றனர்.வட பகுதி என்பது தமிழ் பேசும் மக்களை கொண்டதும், அது தமிழர்களின் பகுதி என்ற வகையில் இன்றைய அரசாங்கம் அதனை வகுத்துள்ளது. அந்த கருத்தை தெரிவித்த பிரதமர் அவர்கள் நீர்கொழும்பில் அல்லது சிலாபத்தில் இந்திய கடற்றொழிலாளர் தொழில் செய்வார்களாக இருந்தால் இந்த கருத்தை அவர் தெரிவிக்க முடியுமா?அதனை அந்த மக்கள் அனுமதிப்பார்களா?”

கடற்றொழிலாளர் சங்கத் தலைவர்

வடக்கில் உள்ள இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட கடற்றொழிலாளர்களுக்கும் அவர்களைச் சார்ந்துள்ளவர்களுக்கும் ஒரே வருமானம் கடற்றொழிலே என கடற்றொழிலாளர் சங்கத் தலைவர் என். எம். ஆலம் சுட்டிக்காட்டிள்ளார்.

“வளங்களை விற்று பணம் சம்பாதிக்கும் நோக்கத்தைத் தவிர அரசு தாங்கள் செய்கின்ற செயற்பாடு அங்குள்ள மக்கள் வாழ்வதற்கானது இல்லை. வடபகுதி கடல் பரப்பு, இங்கு வாழ்கின்ற தமிழ் மக்களின் வாழ்வாதாரம் இது ஒன்றில் தான் தங்கியுள்ளது. இன்று எந்த தொழில் முறையும் இல்லாமல் கடலை மட்டும் நம்பி கிட்டத்தட்ட இரண்டு இலட்சம் கடற்றொழிலாளர்களும், அவர்களைச் சார்ந்த குடும்ப உறுப்பினர்களும் வட பகுதியில் வாழ்ந்து வருகிறார்கள்.”

வடக்கு - தெற்கு என பிரித்துப் பார்ப்பதே பிரச்சினை: கடற்றொழிலாளர்கள் விசனம் | India Sri Lanka Fisherman Issue Dinesh Gunawardena

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாட்டின் வளங்களை வெளிநாட்டவர்கள் பெற்றுக்கொள்ள அனுமதிப்போவது இல்லையென ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

“அவர்கள் முழுமையாக கடலை நம்பியே வாழ்ந்து வருகின்றனர். இந்த விடையம் புரியாத, இந்த கடல் வளத்தை எவ்வாறு பங்கிட்டுக் கொள்ளலாம்? அல்லது எவ்வாறு குத்தகைக்கு விடலாம்? என்ற பிரதமரின் கருத்து எங்களை யோசிக்க வைக்கிறது. எது எவ்வாறு இருந்தாலும், நாங்கள் அன்று இருந்த நிலைப்பாட்டிலே இன்றும் இருக்கின்றோம். இந்திய கடற்றொழிலாளர்கள் எமது கடல் பரப்பில் நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட ஒருபோதும் அனுமதிக்க போவதில்லை.”

இஸ்ரேலின் 'இரும்புக் கூரை' ஹமாஸிடம் தோற்றுவிட்டதா...!

இஸ்ரேலின் 'இரும்புக் கூரை' ஹமாஸிடம் தோற்றுவிட்டதா...!

ஆனந்தபுரச் சமரில் பயன்படுத்திய ஆபத்தான ஆயுதங்கள் காஸா களமுனைகளில் (Video)

ஆனந்தபுரச் சமரில் பயன்படுத்திய ஆபத்தான ஆயுதங்கள் காஸா களமுனைகளில் (Video)

11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பரிஸ், France

17 Oct, 2014
மரண அறிவித்தல்

கொக்குவில், நல்லூர்

12 Oct, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Markham, Canada

06 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான், Jaffna, Scarborough, Canada

13 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், பூந்தோட்டம்

08 Oct, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்

ஓட்டுமடம், Walthamstow, United Kingdom

09 Oct, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், ஜேர்மனி, Germany

06 Oct, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
நினைவஞ்சலி

கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம், நீர்வேலி

28 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஆறுகால்மடம், பலெர்மோ, Italy, பிரித்தானியா, United Kingdom

13 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, Brampton, Canada

12 Oct, 2024
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, சுன்னாகம்

09 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை

10 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், கனடா, Canada

11 Oct, 2009
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Frauenfeld, Switzerland, Weinfelden, Switzerland

09 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US