முல்லைத்தீவில் வயோதிபர் மீது யானை தாக்குதல்
ஒட்டுசுட்டான், மானுருவி பகுதியில் யானை தாக்குதலுக்கு இலக்கான வயோதிப குடும்பஸ்தர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கருவேலன் கண்டல் கிராம அலுவலகர் பிரிவில் மானுருவி கிராமத்தில் இந்த சம்பவம் நேற்று (11.10.2023 )இரவு இடம்பெற்றுள்ளது.
பொலிஸ் விசாரணை
இரவு வேளை வீட்டிற்கு சென்று கொண்டிருந்த வேளை குடும்பஸ்தரை யானை தாக்கியுள்ளது.
இதன்போது காயமடைந்த வயோதிபர் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
மானுரூவி கிராமத்தினை சேர்ந்த 55 வயதையடைய குமாரசாமி அரசகுமார் என்ற வயோதிபரே யானைத்தாக்குதலுக்கு இலக்கியுள்ளார்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பில் ஒட்டுசுட்டான் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.

மீண்டும் ஒளிபரப்பாக போகிறது சன் டிவி-ல் ரசிகர்கள் கொண்டாடிய ஹிட் சீரியல்.. எந்த தொடர் தெரியுமா? Cineulagam

இதுவரை தோல்வியையே சந்திக்காத கேப்டன்! எதிர்கொள்ளப்போகும் அவுஸ்திரேலியா..எதிர்பார்ப்பில் WTC இறுதிப்போட்டி News Lankasri
