ஒன்பது வெளிநாட்டவர்களுக்கு எதிராக கொழும்பு நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு
வெளிநாட்டவர்கள் ஒன்பது பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சட்டவிரோதமாக போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டின் கீழ் ஈரான் பிரஜைகளுக்கு ஆயுள் தண்டனை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜாவினால் வழங்கப்பட்டுள்ளது.
4 வருடங்களுக்கு முன்னர் கடல் மார்க்கமாக இலங்கைக்கு ஹெரோயின் போதைப்பொருள் கடத்தியதாக குற்றம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாடு கடத்த நடவடிக்கை
குறித்த சந்தேக நபர்களிடமிருந்து 80 கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை கைச்சாத்திட்ட சர்வதேச உடன்படிக்கையின் பிரகாரம், குறித்த சிறைத்தண்டனையை அனுபவிக்கும் வகையில் பிரதிவாதிகளை ஈரானுக்கு நாடு கடத்த நடவடிக்கை எடுக்குமாறும் உயர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
ஈரானை நோக்கி நகரும் யுத்தம்!! போர் ஒத்திகைகளை ஏற்கனவே முடித்துக் கொண்ட இஸ்ரேலும் அமெரிக்காவும் (Video)
சீனாவில் நூற்றுக்கணக்கான விமான சேவைகள் ரத்து... லட்சக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேற்றம் News Lankasri
ஹார்முஸ் நீரிணையில் வெடித்து சிதறிய எண்ணெய் கப்பல்- உலக எரிசக்தி விநியோகத்திற்கு அச்சுறுத்தல் News Lankasri