காட்டு யானையின் வருகையால் மின்னேரியா மஹா ரத்மலே கிராம மக்கள் துயரத்தில் உள்ளனர்
மின்னேரியா, மஹா ரத்மலெ கிராம குடியிருப்பு பிரதேசங்களிற்கு யானைகள் வருகை தருவதினால் அப்பிரதேச மக்கள் துயரத்தில் உள்ளனர்.
இது குறித்து மக்கள் தெரிவிக்கையில்,
தொடர்ந்து சில நாட்களாக இந்த பாதையில் யானைகள் நடமாட்டம் அதிகமாகியுள்ளது. யாருக்கு முறைப்பாடு செய்தும் வேலையில்லை. தென்னை மரங்கள், வாழைமரங்கள் என அனைத்தையும் சாய்த்துவிட்டது.
சிறுவர்களை வெளியே அனுப்ப முடியாமல் உள்ளது. மிகவும் அச்சத்தில் வாழ்கின்றோம். இது பெரிய பிரச்சினையாக உள்ளது. மின்வேலிகளையும் உடைத்துக்கொண்டு இந்த யானை வீடுகளுக்கு வருகின்றது.
இந்த மின் வேலிகளுக்கு மின்சார இணைப்பு இணைக்கப்படவில்லை இணைக்கப்பட்டிருந்தால் யானை இவ்வாறு பாதைக்கு வராது.
தினமும் மாலை 5 மணிக்கு பின்னர் இந்த யானை மின்சார வேலிகளை உடைத்து கொண்டு பாதைக்கு வருகின்றது. காலை 6 மணிக்கு பின்னர் அது வந்த வழியூடாகவே காட்டிற்குள் செல்கின்றது.
இந்த யானைக்கு இது பழக்கமாகிவிட்டது. நாங்கள் கத்தி கூச்சலிட்டாலும் அது கண்டுகொள்வதில்லை.
இந்த மின்சார வேலிகளுக்கு மேலதிகமாக இன்னும் இரண்டு பற்றிக்களை இணைக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட சுரேஷ் சலே - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
அறிகுறிகள் வெளிப்படாமல் இருக்கலாம்! இலங்கையில் திருமணம் செய்ய காத்திருப்போருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
கபில சந்திரசேனவின் திடீர் மரணத்தில் தொடரும் மர்மம் - தனியார் வைத்தியசாலையின் செவிலியர் வழங்கிய வாக்குமூலம்
டெக்சாஸ் தடுப்புக்காவலில் 90 நாட்களாக அடைக்கப்பட்டுள்ள இந்திய குடும்பம்: சிதையும் குழந்தைகள் கனவு News Lankasri
365 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறை - பிரித்தானிய அமைப்பில் இடம்பிடித்த தமிழ்நாட்டு பெண் News Lankasri