நாட்டில் பொருட்களின் விலை குறைந்துள்ளது! விஜித் ஹேரத்
நாட்டில் பணவீக்கம் குறைந்து பொருட்களின் விலை குறைந்துள்ளதாக அமைச்சர் விஜித் ஹேரத் தெரிவித்துள்ளார்.
இன்று(27) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடவியலாளர்கள் மாநாட்டிலே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாட்டு கையிருப்பு
மேலும் உரையாற்றிய அவர்,
நாட்டின் பொருளாதாரம் நிலையான தன்மையில் முன்னோக்கி செல்வதோடு வெளிநாட்டு கையிருப்பு அதிகரித்துள்ளது.
கடந்த ஆறு மாதங்களில் 3.7 பில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டு கையிருப்பு கிடைத்துள்ளதோடு உல்லாச பயணத்துறை மேலும் மேலும் வளர்ச்சியை நோக்கி செல்கிறது.
உல்லாச பயணிகளின் வருகையால் பெற்றுக் கொண்ட வருமானம் கடந்த ஆறு மாதங்களில் 1.7 பில்லியன் டொலர் கிடைத்துள்ளது. எங்களின் ஏற்றுமதி பொருளாதாரம் அதிகரித்துள்ளது.
எமது பொருளாதாரம்
அது 10 பில்லியன் டொலராகும்.வெளிநாட்டு கையிருப்பு நிலையான தன்மையில் காணப்படுகிறது.
டொலரின் பெறுமதி 295-300 என்ற வரையறைக்குள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இன்று எமது பொருளாதாரம் நிலையான தன்மைக்கு கொண்டுவரப்பட்டது, வெளிநாட்டு முதலீடுகள் அதிகரித்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.





ரவி மோகன் பேசியதை கேட்டு கெனிஷா கண்ணீர்.. சொத்துக்கள் முடக்கம், பிரச்சனைகள் பற்றி எமோஷ்னல் Cineulagam

சன் டிவியில் ஒளிபரப்பாகும் 2 ஹிட் சீரியல்களின் மெகா சங்கமம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam

Ethirneechal: அறிவுக்கரசியை சின்னாபின்னமாக்கிய தர்ஷினி! ஈஸ்வரியின் போனை கைப்பற்றிய மருமகள்கள் Manithan

உக்ரைனுக்கு எதிராக மீண்டும் அதிரடி முடிவெடுத்த கிம் ஜோங் உன்... 100,000 வீரர்கள் தயார் News Lankasri
