விஜய் ஆண்டனியின் மகள் எழுதிய உருக்கமான கடிதம்: இந்திய ஊடகங்கள் தகவல் - செய்திகளின் தொகுப்பு (Video)
பிரபல இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனியின் மகள் மீரா எழுதியதாக ஊகிக்கப்படும் பத்து வரிகள் கொண்ட கடிதம் மீட்கப்பட்டுள்ளது.
அந்த கடிதத்தில் 'ஐ லவ்யூ ஓல். மிஸ் யூ ஓல்' (I love You All, I Miss You All) என்று எழுதப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தனது நண்பர்களையும், ஆசிரியர்களையும் மிஸ் செய்வேன், நான் இல்லாமல் எனது குடும்பம் தவிக்கும், நானும் தவிப்பேன் என்றும் எழுதப்பட்டுள்ளது.
இவர் நேற்று அதிகாலை 3 மணியளவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வெளியாகின.
மீராவின் உடல் சென்னை - ஓமந்தூரார் மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், பிரேத பரிசோதனை முடிவடைந்து அவரது பெற்றோர் விஜய் ஆண்டனி - பாத்திமாவிடம் உடலம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது தொடர்பிலான முழுமையான செய்திகளையும் மேலும் பல செய்திகளையும் உள்ளடக்கி வருகிறது இன்றைய நாளுக்கான காலை நேர செய்திகளின் தொகுப்பு
நட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 7 மணி நேரம் முன்

சீனாவால் இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியில் கடும் தாக்கம் - Bajaj, Ather, TVS பாதிப்பு News Lankasri
