வெடுக்குநாரிமலை விவகாரம்: மூதூரில் கவனயீர்ப்பு போராட்டம்
சிவராத்திரி தினத்தன்று வவுனியா - வெடுக்குநாறி மலை வழிபாட்டின்போது கைது செய்யப்பட்ட எட்டு பேரையும் விடுதலை செய்ய வலியுறுத்தியும், சிவராத்திரி பூசை வழிபாட்டுக்கு தடை ஏற்படுத்தியமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் மூதூரில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டடுள்ளது.
குறித்த கவனயீர்ப்பு போராட்டமானது நேற்று(18) இடம்பெற்றுள்ளது.
மூதூர் பிரதான வீதியிலிருந்து ஆரம்பமான நடைபவணி பிரதேச செயலகம் வரை பதாதைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டுள்ளனர்.
விடுதலை செய்யக் கோரிக்கை
கவனயீர்ப்பில் ஈடுபட்டோர் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யக்கோரி பதாதைகளை ஏந்தியவாறு கோசங்களை எழுப்பியதையும் காணக்கூடியதாக இருந்தது.
இதன் பின்னர் மூதூர் பிரதேச செயலகத்திற்குச் சென்று பிரதேச செயலக நிருவாக உத்தியோகத்தர் எம்.அலாவுதீன் அவர்களிடம் மகஜர் ஒன்றையும் கையளித்தனர்.
மேலும், திருகோணமலை மாவட்ட ஒன்றிணைந்த சிவில் அமைப்புக்கள் இணைந்து இப்போராட்டத்தினை முன்னெடுத்ததும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |











தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 6 நாட்கள் முன்

சீனா மீது திரும்பிய ட்ரம்பின் கோபம்... ஜி ஜின்பிங் உடனான சந்திப்பு ரத்தாகும் என மிரட்டல் News Lankasri

Bigg Boss 9: ஒங்க இஷ்டத்துக்கு இங்க இருக்க முடியாது.. ஆதிரையை வறுத்தெடுக்கும் விஜய் சேதுபதி- எதற்காக? Manithan

நாளை முதல்... ஐரோப்பிய ஒன்றியத்துக்கு பயணிக்கும் பிரித்தானியர்களுக்கு ஒரு முக்கிய செய்தி News Lankasri

கடையில் ஏற்பட்ட தகராறு, விட்டிற்கு வந்த மனோஜ் செய்த காரியம், அனைவரும் ஷாக்... சிறகடிக்க ஆசை அடுத்த வார புரொமோ Cineulagam
