கலாசார நிலையத்தை திறந்து வைக்க சென்ற அமைச்சர் - இராஜாங்க அமைச்சர் மீது மக்கள் அதிருப்தி!
குருநாகல் பிரதேசத்தில் கலாசார நிலையமொன்றைத் திறந்து வைக்கச் சென்ற அமைச்சர் மற்றும் இராஜாங்க அமைச்சர் மீது அப்பகுதியிலுள்ள மக்கள் சிலர் தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.
நேற்றைய தினம் (11.03.2023) குருநாகல் - பமுனகொடுவ பிரதேசத்தில் கலாசார நிலையம் திறந்து வைக்கும் நிகழ்வில் இடம்பெற்றுள்ளது.
இந்நிகழ்வில் கலந்து கொள்வதற்காக அமைச்சர் விதுர விக்ரமநாயக்க (vidura wickramanayake) மற்றும் இராஜாங்க அமைச்சர் டி.பி.ஹேரத் (D.B. Herath) ஆகியோர் சென்றுள்ளனர்.

பல தடவைகள் திறந்து வைப்பு
பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி அமைச்சர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாகக் கூறப்படுகின்றது.
இதன்போது, குறித்த கலாசார நிலையத்தைப் பல அமைச்சர்கள் பல தடவைகள் திறந்து வைத்துள்ளதாக அங்கிருந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில், அந்த இடத்தில் ஏராளமான பொலிஸார் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பணம் திருடியதால் ஜெயிலில் அடிவாங்கிய சோழன், நிலா உடனே செய்த காரியம்.. அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
அமெரிக்காவை தாக்கும் திறன் கொண்ட ஏவுகணைகளை உருவாக்கும் பாகிஸ்தான் - உளவுத்துறை எச்சரிக்கை News Lankasri