கலாசார நிலையத்தை திறந்து வைக்க சென்ற அமைச்சர் - இராஜாங்க அமைச்சர் மீது மக்கள் அதிருப்தி!
குருநாகல் பிரதேசத்தில் கலாசார நிலையமொன்றைத் திறந்து வைக்கச் சென்ற அமைச்சர் மற்றும் இராஜாங்க அமைச்சர் மீது அப்பகுதியிலுள்ள மக்கள் சிலர் தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.
நேற்றைய தினம் (11.03.2023) குருநாகல் - பமுனகொடுவ பிரதேசத்தில் கலாசார நிலையம் திறந்து வைக்கும் நிகழ்வில் இடம்பெற்றுள்ளது.
இந்நிகழ்வில் கலந்து கொள்வதற்காக அமைச்சர் விதுர விக்ரமநாயக்க (vidura wickramanayake) மற்றும் இராஜாங்க அமைச்சர் டி.பி.ஹேரத் (D.B. Herath) ஆகியோர் சென்றுள்ளனர்.

பல தடவைகள் திறந்து வைப்பு
பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி அமைச்சர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாகக் கூறப்படுகின்றது.
இதன்போது, குறித்த கலாசார நிலையத்தைப் பல அமைச்சர்கள் பல தடவைகள் திறந்து வைத்துள்ளதாக அங்கிருந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில், அந்த இடத்தில் ஏராளமான பொலிஸார் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வளைகுடா நாடுகளில் இருந்து அதிகம் பணம் பெறும் இந்திய மாநிலங்கள் - தமிழ்நாடு எந்த இடத்தில்? News Lankasri
குரு- புதன் உருவாக்கும் அரிய ராஜயோகம்... ஏப்ரல் 3 முதல் இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை உறுதி! Manithan
அந்த மாதிரி விஷயங்களில் நான் சிக்க விரும்பவில்லை... பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் ஓபன் டாக் Cineulagam
அடுத்தடுத்த கேள்விகள் கேட்ட கோமதி, அதிரடி முடிவு எடுத்த பாண்டியன்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam