அடுத்த தேர்தல்களில் மொட்டுக்கே வெற்றி: மகிந்தவின் சகா ஆரூடம்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையில் அமையும் கூட்டணியே அடுத்த தேர்தல்களில் வெற்றி நடைபோடும் என் அக்கட்சியின் சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினரான எஸ்.எம். சந்திரசேன தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் நேற்று(11.01.2024) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
வெற்றி வேட்பாளர்
"அடுத்த ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொள்ள நாம் தயார். எனினும், வேட்பாளர் குறித்து இன்னும் முடிவெடுக்கப்படவில்லை.
வெற்றி வேட்பாளர் ஒருவர் களமிறக்கப்படுவார். இந்த விடயத்தில் கட்சி எடுக்கும் முடிவுக்கு நான் கட்டுப்படுவேன்.
அடுத்த பொதுத் தேர்தலிலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையில் அமையும் கூட்டணியே வெற்றி பெறும்.
அதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்களுக்கு எதிராக சேறுபூசும் நடவடிக்கை இடம்பெறுகின்றது. கப்பல் விவகாரம்கூட இதன் ஓர் அங்கம்தான்” என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் கழன்று விழுந்த சக்கரம்: பரபரப்பை உருவாக்கிய சம்பவம் News Lankasri

சன் டிவி சீரியல்களை ஓரங்கட்டி டாப் 5 TRPயில் முன்னேறிய விஜய் டிவி சீரியல்... அதிரடி மாற்றம் Cineulagam

ஒரு வார முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் செய்துள்ள வசூல்... மொத்தம் எவ்வளவு தெரியுமா? Cineulagam

வெளிநாட்டவர் வேலைவாய்ப்பிற்கு சிக்கல் - பிரித்தானியாவில் 2000 நிறுவனங்களின் விசா ஸ்பான்சர் உரிமங்கள் ரத்து News Lankasri
