சர்ச்சைக்குரிய யாழ்.தையிட்டி விகாரையில் வெசாக் தின ஏற்பாடுகள்(Photos)
யாழ்.தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ ராஜமகா விகாரையில் வெசாக்தின நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் இடம்பெறுகின்றன.
தையிட்டி விகாரையில் வெசாக் தினத்தை முன்னிட்டு வெசாக் கூடுகள் கட்டப்பட்டு, பௌத்த கொடிகள் பறக்கவிடப்பட்டு, பெளத்த பாடல்கள் போடப்பட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
வெசாக் தின ஏற்பாடுகள்
குறித்த ஏற்பாடுகளை இராணுவத்தினர் மேற்கொண்டு வருவதை அவதானிக்க முடிவதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரையை அகற்றுமாறு வலியுறுத்தி மக்களின் போராட்டம் இடம்பெற்று வருகின்றது.
இந்நிலையில் தையிட்டி எமது நிலம், புத்த விகாரை வேண்டாம், இராணுவமே வெளியேறு என போராட்டகாரர்கள் பதாகைகளை தாங்கியவாறு போராட்டத்தில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றனர்.
மக்கள் போராட்டம்
போராட்டத்தை இன்று மாலை முடிவுக்கு கொண்டுவருவதாக முன்னர் ஏற்பாட்டாளர்களால் அறிவிக்கப்பட்டாலும் போராட்டம் சிலவேளை தொடர்ச்சியாக இடம்பெறலாமென எதிர்பார்க்கப்படுகிறது.
சட்டவிரோதமாக கட்டப்பட்ட தையிட்டி விகாரையை அகற்றுமாறு கோரி கடந்த புதன்கிழமை
போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில், அதனை தொடரச்சியாக மூன்று
நாட்களுக்கு முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.










இந்தியாவின் எதிரி நாடுகளுக்கு புதிய அச்சுறுத்தல் - கடற்படையில் 10 புதிய போர்க்கப்பல்கள் இணைப்பு News Lankasri

வடிவேல் பாலாஜி போல் கெட்டப் போட்டு ஆளே மாறிய அவரது மகன் ஸ்ரீகாந்த்.. இதோ புகைப்படத்தை பாருங்க Cineulagam
