தன்சல்கள் வழங்குவோருக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்
தன்சல் எனப்படும் உணவு தானத்திற்கு தேவையான சுகாதார ஆலோசனைகளை வழங்க தயாராக இருப்பதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் ஒன்றியத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.
மே மாதம் 21ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரையான காலப்பகுதி வெசாக் வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
உரிய அறிவுறுத்தல்
இது தொடர்பில் உபுல் ரோஹண மேலும் தெரிவிக்கையில், வெசாக் தினத்தை முன்னிட்டு நடத்தப்படும் தன்சல்களுக்குத் தேவையான சுகாதார ஆலோசனைகளை வழங்கத் தயார்.
தன்சல் இடங்களை பதிவு செய்வதற்கு அருகிலுள்ள பொதுச் சுகாதார அதிகாரியின் அலுவலகத்திற்குச் சென்று உரிய அறிவுறுத்தல்களைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |