கச்சத்தீவு தொடர்பில் இந்திய நாடாளுமன்றில் காங்கிரஸ் மீது வார்த்தை தாக்குதல்
கச்சத்தீவை இலங்கைக்கு 1974 ஆம் ஆண்டு, வழங்கியமை தொடர்பில், இந்திய நாடாளுமன்றத்தில் இன்று காங்கிரஸ் மீது பாரதீய ஜனதாக்கட்சி கடும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளது.
முன்னதாக, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம், சியாச்சினை பாகிஸ்தானுக்கு விட்டுக்கொடுக்கத் தயாராக இருந்ததாக இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் சூர்யா குற்றம் சுமத்தியுள்ளார்.
சியாச்சன், இந்த நாட்டின் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கான உறுதிப்பாடு என்று சூர்யா குறிப்பிட்டுள்ளார்.
கச்சத்தீவு அரசியல்
மேலும், இந்தியாவிற்குச் சொந்தமான மிக முக்கியமான கச்சத்தீவு, அரசியல் காரணங்களுக்காக காங்கிரஸால் பரிசாக இலங்கைக்கு வழங்கப்பட்டது, எனவே காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கம், நாட்டின் பிரதேசங்களை ஏனைய நாடுகளுக்கு வழங்குவது சாதாரண விடயமே என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கச்சத்தீவு தீவை வழங்கும் போது நாடாளுமன்றுக்கு அது தெரிவிக்கப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேநேரம் தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் கருணாநிதி தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகமும், அதனை ஆதரித்ததாக சூர்யா குற்றம் சுமத்தினார்.
மேலும், ஜவகர்லால் நேருவும், இந்த சிறிய தீவுக்கு தாம் எந்த முக்கியத்துவத்தையும் கொடுக்கவில்லை என்று தெரிவித்திருந்ததாக சூர்யா சுட்டிக்காட்டியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சரிசமப சீசன் 5 போட்டியாளரும், தேவயானி மகளுமான இனியாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்... போட்டோஸ் இதோ Cineulagam
விண்வெளியில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கும் தமிழர் - விண்ணுக்கு புறப்பட்ட PSLV C62 News Lankasri
பிரித்தானிய அரசுக்கு ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி... ஆயுதமாக பயன்படுத்திய புலம்பெயர்தலால் உருவாகியுள்ள சிக்கல் News Lankasri
இந்தியாவுக்கு வருகைபுரியும் ஜேர்மன் சேன்ஸலர்: மீண்டும் தலையெடுக்கும் குழந்தை அரிஹா விவகாரம் News Lankasri
பற்றியெரியும் ஈரான்... போர்க்களமான தெருக்கள்: இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ள வர்த்தகப் பாதிப்பு News Lankasri