அநுர அரசாங்கத்தைச் சாடும் வேலுகுமார்..!
பொருளாதாரப் போரில் இருந்து மக்களை மீட்போம் என சிவப்புத் தோழர்கள் கொக்கரித்தார்கள். ஆனால், இன்று பொருட்களின் விலைகள் எகிறியுள்ளதோடு, தமிழ் மக்களின் பாரம்பரிய பண்டிகையான தீபாவளியைக் கூட சந்தோஷமாகக் கொண்டாட முடியாதளவுக்கு பொருளாதாரச் சுமை காணப்படுகின்றது என புதிய ஜனநாயக முன்னணியின் கீழ் கண்டி மாவட்டத்தில் போட்டியிடும் நாடாளுமன்ற வேட்பாளர் எம்.வேலுகுமார் (M. Velu Kumar) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கூறுகையில், “ரணில் விக்ரமசிங்க ஆட்சியின் போது வழங்கப்பட்ட அஸ்வெசும கொடுப்பனவு போதாது எனவும், தாங்கள் ஆட்சிக்கு வந்தால் மக்களின் வாழ்வாதாரம் மேம்படும் எனவும் தேசிய மக்கள் சக்தியினர் கூறிவந்தனர்.
மக்களின் வாழ்க்கைச் சுமை
எனவே, அஸ்வெசுமவைவிட அதிக கொடுப்பனவு வழங்கப்படும் என மக்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால். அப்படி எதுவும் நடக்கவில்லை. மக்களின் வாழ்க்கைச் சுமையும் குறையவில்லை. மாறாக நாளாந்தம் பொருட்களின் விலைகள் அதிகரித்து வருகின்றன.
இதனால் பெருந்தோட்டப் பகுதிகளில் உள்ள மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தீபாவளி பண்டிகை பெருந்தோட்டப் பகுதிகளில் சிறப்பாகக் கொண்டாடப்படும். ஆனால், பொருட்களின் விலைகளைப் பார்க்கும்போது, கொண்டாடுவதை விட்டுவிட்டு திண்டாட வேண்டிய நிலையே காணப்படுகின்றது.
தேர்தல்தான் முக்கியம்
அதேவேளை, கட்சி தேர்தல் அரசியலைவிட நாடுதான் முக்கியம் என்று தேசிய மக்கள் சக்தியினர் கூறி வந்தனர்.
ஆனால், பிரிக்ஸ் மாநாட்டுக்கு அழைப்பு விடுத்தும் ஜனாதிபதி அநுரகுமார செல்லவில்லை. இதன்மூலம் எமக்கு இராஜதந்திர ரீதியில் கிடைக்கவிருந்த பல நன்மைகள் இல்லாமல் போயுள்ளன.

நாட்டில் பொதுத் தேர்தல் நடைபெறுவதால்தான் ஜனாதிபதி செல்லவில்லை என கூறப்படுகிறது. நாட்டைவிட தேர்தல்தான் முக்கியம் எனில் அவர்கள் கூறிய மாற்றம் அதுதானா?
பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாடும் நடைபெற்றது. அதிலும் ஜனாதிபதி பங்கேற்கவில்லை. அரச தலைவர்கள் மாநாட்டுக்கு அதிகாரிகளை அனுப்புவதன் மூலம் முழு நன்மையும் கிடைக்கப்பெறப் போவதில்லை.
இது தொடர்பில் சிவப்பு தோழர்கள் கூறப்போவது என்ன?” என்றும் வேலுகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
You may like this,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
புதிய கம்பெனிக்கு பார்ட்னர் ஆன நிலா, ரூ. 5 லட்சம் ரெடியானதா, ஹேப்பி எபிசோட்... அய்யனார் துணை சீரியல் Cineulagam
ஈரான் மீது திரும்பும் உலக நாடுகள் கவனம்: உக்ரைனுக்கு நல்லதல்ல: ஜெலென்ஸ்கி புதிய நகர்வு News Lankasri
குணசேகரன் பிளானுக்கு இடையில் அறிவுக்கரசி செய்த பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
ஈரான் போரில் அதிரடி திருப்பம்... ஹார்முஸ் பகுதியில் 5,000 கடற்படை வீரர்களைக் களமிறக்கும் ட்ரம்ப் News Lankasri
ஈரானில் ஸ்டார்லிங்க் மூலம் இணைய சேவை வழங்கிய இளைஞர்: அந்நாட்டு பொலிஸார் அதிரடி நடவடிக்கை News Lankasri