வெலிவேரிய பகுதியில் துப்பாக்கிச்சூடு! இருவர் தப்பியோட்டம்
வெலிவேரிய பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
வெலிவேரிய, அம்பறலுவ வீதி ஜூபிலி மாவத்தை பிரதேசத்தில் இன்று (05) காலை இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் காரில் பயணித்த நபர் ஒருவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய விட்டு மோட்டார் சைக்கிளை சம்பவ இடத்திலேயே விட்டுவிட்டு சிறிய ரக லொறியில் தப்பிச்சென்றுள்ளனர்.
துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான நபர் கம்பஹா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
திட்டமிட்ட குற்றவாளியாக கருதப்படும் "கெஹெல்பத்தர பத்மே" என்பவரால் இந்த துப்பாக்கிச் சூடு வழிநடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதுடன், துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர் "பஸ்போட்டா" என்பவரின் சாரதியாக பணியாற்றியவர் என்றும் தெரியவந்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

மணிவிழாவிற்கு மாலையுடன் உட்கார்ந்த குணசேகரனுக்கு விழுந்த பெரிய இடி.. கெத்து காட்டிய ஜனனி, எதிர்நீச்சல் சீரியல் Cineulagam

ரஜினி, கமல் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்துகொண்ட ஐசரி கே கணேஷ் மகள் திருமணம்.. புகைப்படங்கள் இதோ Cineulagam
