அதிகப்படியான புகை வெளியேற்றும் வாகனங்கள்.. விடுக்கப்பட்டுள்ள கடுமையான எச்சரிக்கை
அதிகப்படியான புகை வெளியேற்றம் தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட பராமரிப்பு உத்தரவுகளைப் பின்பற்றத் தவறும் வாகனங்கள் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்படும் என மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பராமரிப்பு வழிகாட்டுதல்களைப் புறக்கணிக்கும் அல்லது தொடர் ஆய்வுகளைத் தவிர்க்கும் உரிமையாளர்கள், வருவாய் உரிமங்கள் மற்றும் பிற வாகன தொடர்பான ஆவணங்களைப் பெறுவதில் பெரும் சிரமங்களை எதிர்கொள்ள நேரிடும் என்று அந்தத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கருப்புப் புகை வெளியேறுவது வெறும் தொழில்நுட்பக் குறைபாடு மட்டுமல்ல, அது வருங்கால சந்ததியினரைப் பாதிக்கும் ஒரு சுற்றுச்சூழல் அபாயமும் கூட என்று அதிகாரிகள் எச்சரித்ததோடு, வாகன உரிமையாளர்கள் முறையான பராமரிப்பை மேற்கொள்ளுமாறும் வலியுறுத்தினர்.
முக்கிய வலியுறுத்தல்..
இதற்கிடையில், இலங்கை பொலிஸாரின் ஆதரவுடன் கண்டி மாவட்டத்தில் மே 6 முதல் மே 8 வரை ஒரு சிறப்பு சாலையோர வாகன புகை வெளியேற்ற பரிசோதனைத் திட்டம் நடத்தப்பட்டது.

கெதாம்பே மற்றும் கட்டுகஸ்தோட்ட பகுதிகளில் நடமாடும் புகை வெளியேற்றச் சோதனைக் கருவிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.
அங்கு, அதிகப்படியான புகையை வெளியிடும் வாகனங்களை அதிகாரிகள் கண்டறிந்து, உடனடிப் பராமரிப்பு உத்தரவுகளைப் பிறப்பித்தனர்.
சமீபத்திய மாதங்களில் அதிகரித்து வரும் வாகனங்கள் தொடர்பான காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் நோக்கில், இந்த மாதம் முதல் சாலையோரப் புகைப் பரிசோதனைகளைத் தீவிரப்படுத்தவுள்ளதாக வாகனப் புகைப் பரிசோதனை அறக்கட்டளை (VETTF) தெரிவித்துள்ளதாக திணைக்களம் கூறியுள்ளது.
மோட்டார் போக்குவரத்துத் துறையின் கீழ் அறக்கட்டளை நிதியத்தை ஒரு நேரடிப் பிரிவாக ஒருங்கிணைத்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட நிர்வாக மாற்றங்கள் காரணமாக, ஆய்வுகள் தற்காலிகமாக மந்தமடைந்துள்ளதாக அது மேலும் தெரிவித்துள்ளது.
ஸ்ருதி வீட்டு உணவால் அவதிப்படும் விஜயா, எலி தொல்லையில் மாட்டிக்கொண்ட மனோஜ்.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ Cineulagam
வருகிற ஞாயிற்றுக்கிழமை சன் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர்ஹிட் திரைப்படங்கள்.. புரோமோ வீடியோ Cineulagam