வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடை! பின்னணியில் சிக்கிய மோசடி
வாகன இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், சட்டவிரோதமான முறையில் அதிக அளவில் வாகனங்கள் கடத்தப்படுவது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
வாகன இறக்குமதியாளர்கள் மற்றும் மோட்டார் போக்குவரத்து திணைக்கள அதிகாரிகள் பலரால் இந்த கடத்தல் நடத்தப்பட்டதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் இலங்கையில் சுமார் 5000 வாகனங்கள் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் இதுவரை 200 வாகனங்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன் பிரகாரம் 6 சந்தேகநபர்கள் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும், இந்த கடத்தல் சில காலமாக இடம்பெற்று வருவதாகவும் ஆணைக்குழு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
கடைசி நேரத்தில் தேர்தலில் நடந்த மாற்றம், வெற்றியை தட்டித் தூக்கிய மீனா... சிறகடிக்க ஆசை சூப்பர் எபிசோட் Cineulagam
அதிர்ச்சி செய்தி சொன்ன பிறகு ஈஸ்வரிக்கு குட் நியூஸ் சொன்ன அப்பத்தா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
மாகாபா, புகழ், கானா வினோத் மீது போலீஸில் புகார் அளித்த Watermelon திவாகர்... ரகளையான CWC செட் Cineulagam
அடுத்த சில வாரங்களுக்குள்... ஈரானுக்கு சீனாவின் பேருதவி: அமெரிக்க உளவுத்துறை வெளிப்படை News Lankasri