வரியின்றிய வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான தகவல்
இலங்கைக்கு (Sri Lanka) வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதிக்கும் போது, தொழில் வல்லுநர்களுக்கு கடந்த காலங்களில் வழங்கப்பட்டு வந்த வரிச் சலுகையை இரத்துச் செய்வது குறித்து ஆராயப்பட்டு வருவதாக நிதியமைச்சின் (Ministry Finance) தகவல்கள் தெரிவிக்கின்றன.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பரிந்துரைகளுக்கு அமைவாக வாகன இறக்குமதி மீதான தடையை நீக்குவது குறித்து தற்போது அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது.
இதற்காக விசேட குழு ஒன்றும் நியமிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான வாய்ப்பு இடைநிறுத்தப்படும்
எதிர்காலத்தில் வாகன இறக்குமதித் தடை முழுமையாக நீக்கப்படுமாக இருந்தால், தொழில் வல்லுநர்களுக்கு வழங்கப்பட்டு வந்த வரிச் சலுகையுடன் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான வாய்ப்பு இடைநிறுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை சாதாரணமாக வாகன இறக்குமதிக்கு 200 சதவீதம் வரையான வரியை ஏனைய தரப்பினர் செலுத்துகின்றனர்.
இந்த நிலையில் தொழில் வல்லுநர்கள் வரியின்றி வாகனம் ஒன்றை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 14 மணி நேரம் முன்
கடை திறப்பு விழா முடிந்தது, அடுத்து தர்ஷன் கிளப்பிய பிரச்சனை, குணசேகரன் அடுத்த பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan
விரைவில் முடிவுக்கு வரும் பூங்காற்று திரும்புமா சீரியலின் கிளைமேக்ஸ் காட்சியின் போட்டோஸ்... Cineulagam
பிரித்தானியாவில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண் வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள புதிய தகவல்கள் News Lankasri