கிளிநொச்சியில் வாகன விபத்து: மூவர் வைத்தியசாலையில்
கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முகமாலை இந்திராபுரம் A-9 வீதியில் இரண்டு மோட்டார் சைக்கிளை ஹயர்ஸ் ரக வாகனம் மோதித்தள்ளியதில் மூவர் காயமடைந்துள்ளனர்.
குறித்த விபத்தானது இன்று(16.03.2025)இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
ஹயர்ஸ் ரக வாகனம்
இரண்டு மோட்டார் சைக்கிளை குறித்த ஹயர்ஸ் ரக வாகனம் மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது மோட்டார் சைக்கிள்களில் பயணித்த இரு ஆண்களும் ஒரு யுவதியும் பளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அங்கிருந்து கிளிநொச்சி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், சம்பவ இடத்திற்கு வருகை தந்த பளை போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
