அநுராதபுரம் - ரம்பேவ பகுதியில் வாகன விபத்து: மூவர் பலி இருவர் படுகாயம்
அநுராதபுரம் – ரம்பேவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து நேற்று(09.03.2024) இரவு இடம்பெற்றுள்ளது.
இசை நிகழ்ச்சியொன்றை பார்வையிட்டு வீடு திரும்பியவர்கள் மீது கெப் ரக வாகனமொன்று மோதியுள்ளதுடன், விபத்தின் பின்னர் கெப் ரக வாகனத்துடன் சாரதி தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.
மேலதிக விசாரணை
விபத்தில் ரம்பேவ பகுதியைச் சேர்ந்த 15, 19 மற்றும் 21 வயதான மூவரே உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்தில் மேலும் இருவர் காயமடைந்துள்ளதுடன், அவர்கள் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ரம்பேவ பகுதியில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியொன்றை பார்வையிட்டு, 7 பேரை கொண்ட குழுவொன்று வீடு திரும்பிய சந்தர்ப்பத்தில், கெப் ரக வாகனமொன்று விபத்தை ஏற்படுத்தி தப்பிச் சென்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த கெப் ரக வாகனம் அநுராதபுரம் திசையை நோக்கி பயணித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஈஸ்டர் தாக்குதலை அடுத்து சிறையில் பிள்ளையானை சந்தித்த ராஜபக்சர்கள்! திடுக்கிடும் பல உண்மைகள் அம்பலம்
மகிந்த மட்டும் அந்த இருவரின் பேச்சைக் கேட்டிருந்தால் இன்று ஈழம் மலர்ந்திருக்கும்..! போர்க் கால இரகசியங்கள் கூறும் சரத் வீரசேகர
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட சுரேஷ் சலே - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
அறிகுறிகள் வெளிப்படாமல் இருக்கலாம்! இலங்கையில் திருமணம் செய்ய காத்திருப்போருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
கடைக்கு வந்து மனோஜிடம் சிரித்து பேசிக்கொண்டிருந்த ரோஹினி, அதிரடி காட்டிய விஜயா.... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
முத்துவேலுக்கு புற்றுநோய் என தெரிந்ததும் பாண்டியன் செய்த காரியம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam