மரக்கறிகளின் விலையில் ஏற்பட்டுள்ள பாரிய வீழ்ச்சி
நாட்டில் மரக்கறிகளின் விலையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக பேலியகொடை மெனிங் சந்தையின் பொது வர்த்தக சங்கத்தின் உப தலைவர் தெரிவித்துள்ளார்.
கடும் மழையுடனான காலநிலை காரணமாக இவ்வாறு மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, ஒரு கிலோ போஞ்சி 280 ரூபாவாகவும், ஒரு கிலோ லீக்ஸ் 160 ரூபாவாகவும், ஒரு கிலோ கோவா 100 ரூபாவாகவும், ஒரு கிலோ தக்காளி 250 ரூபாவாகவும், ஒரு கிலோ கரட் 100 ரூபாவாகவும், ஒரு கிலோ பச்சை மிளகாய் 200 ரூபாவாகவும், ஒரு கிலோ கறி மிளகாய் 400 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
விலைகளின் விபரம்
இதேவேளை, ஒரு கிலோ வெங்காயத்தாள் 180 ரூபாவாகவும் , ஒரு கிலோ பீட்ரூட் 80 ரூபாவாகவும் ,ஒரு கிலோ முருங்கைக்காய் 300 ரூபாவாகவும் , ஒரு கிலோ நோகோல் 100 ரூபாவாகவும் , ஒரு கிலோ தேசிக்காய் 200 ரூபாவாகவும் , ஒரு கிலோ இஞ்சி 800 ரூபாவாகவும், ஒரு கிலோ வெண்டைக்காய் 100 ரூபாவாகவும், ஒரு கிலோ பூசணி 100 ரூபாவாகவும், ஒரு கிலோ பீர்க்கங்காய் 150 ரூபாவாகவும், ஒரு கிலோ பாகற்காய் 350 ரூபாவாகவும் , ஒரு கிலோ முள்ளங்கி 50 ரூபாவாகவும், ஒரு கிலோ புடலங்காய் 200 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

அத்துடன் ஒரு கிலோ கத்திரிக்காய் 150 ரூபாவாகவும் , ஒரு கிலோ பயற்றங்காய் 150 ரூபாவாகவும் ,ஒரு கிலோ பெரிய வெங்காயம் 250 ரூபாவாகவும் , ஒரு கிலோ உருளைக்கிழங்கு 160 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"காலம் முடிவு செய்துவிட்டது".. முதலமைச்சர் விஜய்யை தொடர்ந்து அரசியலில் களமிறங்குகிறாரா சூர்யா.. Cineulagam
பாக்கியராஜின் மறைவு... குஷ்பு கணவருடன் வெளியிட்ட புகைப்படம்! விளாசிய நெட்டிசனுக்கு குஷ்புவின் பதில் Manithan
50 கிலோ விஷம், 30,000 காப்ஸ்யூல்கள்: 15,000 பேரை கொல்ல சதித்திட்டம்: பயாஸ் பிரேம்ஜி கைது News Lankasri
பிரான்ஸில் காருக்குள் சிக்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்கள்: தாயின் பதிலில் பொலிஸாருக்கு சந்தேகம் News Lankasri