இரு மடங்காக அதிகரித்துள்ள மரக்கறி விலை
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக விவசாய துறை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் சில மரக்கறிகளின் விலை இரு மடங்காக அதிகரித்துள்ளது.
நாளாந்தம் காய்கறிகளின் விளைச்சல் படிப்படியாக குறைந்து வருவதால் விலை உயர்ந்துள்ளதாக பொருளாதார மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மரக்கறி விலை அதிகரிப்பு
தம்புள்ளை விஷேட பொருளாதார மத்திய நிலையம் வெளியிட்டுள்ள தகவலின்படி கடந்த சில நாட்களாக ஒரு கிலோ பச்சை மிளகாயின் சில்லறை விலை 150 ரூபாவாக குறைந்திருந்த போதிலும், தற்போது ஒரு கிலோவின் விலை 300 ரூபாவாக அதிகரித்துள்ளது.
இதேவேளை ஒரு கிலோ செத்தல் மிளகாய் மொத்த விற்பனை விலை 1750 ரூபாவாகவும் ஒரு கிலோ புளி வாழைப்பழத்தின் சில்லறை விலை 150 ரூபாவாகவும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பீட்ரூட் 200 முதல் 250 ரூபாய் வரையிலும் தக்காளி 110 முதல் 130 ரூபாய் வரையிலும், நோகோல் 200 முதல் 220 ரூபாய் வரையிலும், பீர்க்கங்காய் 200 முதல் 210 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படுகின்றன.
நுவரெலியா சந்தை நிலவரம்
மேலும் நுவரெலியாவில் உருளைக்கிழங்கு, கரட், லீக்ஸ் போன்ற மரக்கறிகளின் சில்லறை விலை 600 ரூபாவாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு கிலோ கரட்டின் மொத்த விலை 250 முதல் 280 ரூபாய் வரையிலும், ஒரு கிலோ வெண்டைக்காய் மொத்த விற்பனை விலை 300 முதல் 330 ரூபாய் வரையிலும், நுவரெலியா உருளைக்கிழங்கு ஒரு கிலோவின் மொத்த விலை 370 முதல் 380 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படுகின்றன.