காய்கறிகளின் விலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்
சந்தையில் காய்கறிகளின் விலை, மிக வேகமாக குறைந்து வருவதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.
சந்தையில் அதிக விலைக்கு விற்கப்பட்ட கரட், போஞ்சி, முட்டைகோஸ், கறிமிளகாய் போன்ற காய்கறிகளின் விலை வேகமாக குறைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காய்கறிகளின் விலை
இதற்கமைய கொழும்பு மெனிங் சந்தையில் தக்காளி கிலோ 300 ரூபாவுக்கும், கத்திரிக்காய் கிலோ 150 ரூபாவுக்கும் பச்சை மிளகாய் கிலோ 300 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகின்றன.

இதேவேளை ஒரு கிலோ போஞ்சி 300 ரூபாவுக்கும், கரட் 1 கிலோ 300 ரூபாவுக்கும், முட்டைக்கோஸ் கிலோ 320 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுவதாகவும் நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.
மேலும் கடந்த சில நாட்களாக சந்தையில் காய்கறிகளின் விலை மிக அதிகமாக இருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் துரந்தர் திரைப்படம்.. என்று, எந்த நேரத்தில் ஒளிபரப்பாகிறது தெரியுமா? Cineulagam
வீடு பறிபோகும் பயம் இல்லாமல் மனோஜ் செய்த காரியம், வெளுத்து வாங்கிய விஜயா... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam