சர்ச்சையை ஏற்படுத்திய வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலய விவகாரம்: இந்திய உயர்ஸ்தானிகர் வழங்கிய உறுதிமொழி

Colombo Sri Lanka Jeevan Thondaman India
By Sachi Apr 10, 2023 05:14 PM GMT
Report

வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலய வழிபாடுகள் மற்றும் தொடர்ச்சியாக தொல்பொருள் திணைக்களம், பொலிஸார் ஊடாக ஏற்படுத்தப்பட்டு வரும் அச்சுறுத்தல் தொடர்பில் உரியவர்களுடன் பேசி தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே உறுதியளித்துள்ளார்.

வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயம் மற்றும் குருந்தூர் மலை விவகாரம் தொடர்பில் கொழும்பில் அமைந்துள்ள இந்திய துணைத் தூதரகத்தில் இன்று (10.04. 2023) நடைபெற்ற சந்திப்பின் போதே இவ்வாறு உறுதியளித்துள்ளார்.

சர்ச்சையை ஏற்படுத்திய வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலய விவகாரம்: இந்திய உயர்ஸ்தானிகர் வழங்கிய உறுதிமொழி | Vedukunari Temple Indian Ambassador Visit

கலந்துரையாடப்பட்ட விடயங்கள்

சந்திப்பின் போது, குருந்தூர் மலையில் சைவ சமய வழிபாடுகள் நீக்கப்பட்டு நீதிமன்ற உத்தரவை மீறி புத்தர் விகாரை நிறுவப்பட்ட விடயம் தொடர்பிலும், அதனைத் தொடர்ந்து வவுனியா, நெடுங்கேணி வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலயத்தில் தொடர்ந்தும் இடம்பெற்று வரும் சம்பவங்கள் தொடர்பில் இந்திய துணைத் தூதருக்கு தெளிவுப்படுத்தப்பட்டது.

அத்துடன், எல்லையோரக் கிராமங்களில் இடம்பெறும் பௌத்தமயாக்கல் மற்றும் சிங்கள குடியேற்றங்களின் விஸ்தரிப்பு தொடர்பிலும் சுட்டிக் காட்டியதாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலய வழிபாடுகள் மற்றும் தொடர்ச்சியாக தொல்பொருள் திணைக்களம், பொலிஸார் ஊடாக ஏற்படுத்தப்பட்டு வரும் அச்சுறுத்தல் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டது.

சர்ச்சையை ஏற்படுத்திய வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலய விவகாரம்: இந்திய உயர்ஸ்தானிகர் வழங்கிய உறுதிமொழி | Vedukunari Temple Indian Ambassador Visit

இவை தொடர்பில் கவனம் கெசலுத்திய இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, இவை தொடர்பில் உரியவர்களுடன் பேசி தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.

அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவுடனான சந்திப்பு 

அதனைகத் தொடர்ந்து ஆலய நிர்வாகத்தினர், பௌத்தசாசன மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்காவினை சந்தித்தித்து வெடுக்குறாறி மலை ஆலய விடயம் தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர்.

இதன்போது, நீதிமன்ற வழக்கு முடியும் வரை இவ் விடயத்தில் தலையிட முடியாது என அமைச்சர் தெரிவித்தாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

இச்சந்திப்பில் இந்து மாமன்றத்தின் தலைவர், இந்து மாமன்றத்தின் பொருளாளர், திருக்கேதீஸ்வர ஆலயத்தின் தலைவர் மற்றும் வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலய நிர்வாகத்தினர் உட்பட 8 பேர் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தி : திலீபன்

முதலாம் இணைப்பு 

வவுனியா - நெடுங்கேணி வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலய நிர்வாகத்தினரை இலங்கைக்கான இந்தியத் தூதுவர்  சந்திக்கவுள்ளார்.

வெடுக்குநாறி ஆலய நிர்வாகம் முன்வைத்த கோரிக்கையின் பெயரில் இன்று (10.04.2023) இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளது.

வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலய விக்கிரகங்கள் அழிக்கப்பட்டமை தொடர்பில் அவை மீண்டும் பிரதிஸ்டை செய்யப்படும் என அமைச்சர்களான டக்ளஸ் தேவானாந்தாவும் ஜீவன் தொண்டமானும் வாக்குறுதி அளித்தனர்.

சர்ச்சையை ஏற்படுத்திய வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலய விவகாரம்: இந்திய உயர்ஸ்தானிகர் வழங்கிய உறுதிமொழி | Vedukunari Temple Indian Ambassador Visit

வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் விவகாரம்

அதனை நிறைவேற்றாது ஏமாற்றியதன் விளைவாக ஆலய நிர்வாகம் இதனை இந்திய தூதரகம் மற்றும் இந்து அமைப்புக்கள் ஊடாக பாரதப் பிரதமரின் கவனத்திற்கும் கொண்டு சென்றுள்ளனர்.

இவற்றின் அடிப்படையில் ஆலய வரலாறு, தற்போதைய வழக்கு நிலவரங்கள், இடையூறுகள் தொடர்பாக கேட்டறியும் நோக்கில் இன்று மாலை இச்சந்திப்பு இடம்பெறவுள்ளது.

சர்ச்சையை ஏற்படுத்திய வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலய விவகாரம்: இந்திய உயர்ஸ்தானிகர் வழங்கிய உறுதிமொழி | Vedukunari Temple Indian Ambassador Visit

கச்சதீவில் வைக்கப்பட்ட புத்தர் சிலை 

இவ்வாறு இந்திய அரசாங்கம் குறித்த விடயத்தை கையில் எடுப்பதனால் இலங்கை அரசாங்கம் ஆட்டம் காணுமா அல்லது சட்டத்தின் பெயரால் தொடர்ந்தும் அழுத்தம் வழங்குமா என்ற பெரும் கேள்வி எழுந்துள்ளது.

கச்சதீவில் வைக்கப்பட்ட புத்தர் சிலை தொடர்பில் ஏற்கனவே இந்தியா கடும் அதிருப்தி கொண்டு அதனை இலங்கை அரசிற்கு தெரிவித்துள்ள அதேநேரம் வெடுக்குநாறியும் இந்தியாவின் கையில் சென்றிருப்பது தமிழர்களிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
மரண அறிவித்தல்

அநுராதபுரம், விசுவமடு

19 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US