ரணிலின் கைதின் பின்னர் ஏற்பட்டுள்ள புதிய அரசியல் சூழ்நிலைகள்! அவசரமாக ஒன்றுகூடும் எதிர்க்கட்சியினர்
எதிர்க்கட்சி தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளின் விசேட கூட்டம் ஒன்று நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விசேட கூட்டம், இன்று மாலை 5 மணிக்கு நாரஹேன்பிட்டியில் உள்ள முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸின் இல்லத்தில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடக்குமுறை
இந்த விசேட கூட்டத்தில், அரசாங்கம் அடக்குமுறையான முறையில் நகர்ந்து வருவதாகவும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கைது மற்றும் அதன் பின்னர் எழுந்துள்ள புதிய அரசியல் சூழ்நிலைகள் உள்ளிட்ட அரசியல் பிரச்சினைகள் குறித்து இன்று விரிவாகக் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய அரசியல் நிலைமை குறித்தும் எதிர்க்கட்சியை விரிவுபடுத்துவதற்கும் அரசாங்கத்திற்கு எதிராக ஒன்றுபடுவதற்குமான முன்னோடித் திட்டம் குறித்தும் விவாதிக்கப்படும் என்று இந்த நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ள எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.





சத்தீஸ்கர் வெள்ளத்தில் சிக்கிய தமிழ் குடும்பம்! சுற்றுலா சென்றபோது 4 பேரும் உயிரிழந்த பரிதாபம் News Lankasri
