புதுவருட தினத்தன்று வவுனியாவில் ஐவர் கைது
மது போதையில் வாகனங்களை செலுத்திய குற்றச்சாட்டில் புதுவருடமான நேற்றைய தினம் 5 பேர் வவுனியா போக்குவரத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த விடயத்தை வவுனியா தலைமை பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரி ரொஷான் சந்திரசேகர தெரிவித்துள்ளார்.
வவுனியா தலைமை பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவினரால் நகரப் பகுதிகளில் நேற்றைய தினம் விசேட சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது மதுபோதையில் வாகனம் செலுத்துதல் மற்றும் வீதி ஒழுங்குகளை பேணாமல் வாகனம் செலுத்துபவர்கள் தொடர்பாக விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை கைது செய்யப்பட்டவர்களது வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்டவர்கள் இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்து சமுத்திரம் லங்கா சமுத்திரமாக மாறுமா..! 4 நாட்கள் முன்
யாழில் ஆலயத்திற்குச் சென்ற 400 பேரின் கண்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு! மருத்துவ அறிக்கையில் வெளியான காரணம்
தந்தைக்கே பல இலட்சம் ரூபா வாடகை செலுத்திய ஷிரான் பாசிக்! முன்னாள் பிரதியமைச்சர் ஒருவரின் புகைப்படமும் கண்டுபிடிப்பு...