வவுனியா- புதூர் நாகதம்பிரான் ஆலய பிரதான வீதி திருத்தும் பணி ஆரம்பம்!
வரலாற்று சிறப்பு மிக்க வவுனியா- புதூர் நாகதம்பிரான் ஆலய பிரதான வீதிக்கு காப்பற் இடும் பணியினை இன்று தேசிய மக்கள் சக்தியின் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் ஆரம்பித்து வைத்துள்ளார்.
போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் வழிகாட்டுதலின் அடிப்படையில் மாகாணத்திற்கு ஒதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியின் கீழ் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
காப்பற் இடும் பணி
இந்தநிலையில், 24 மில்லியன் ரூபா செலவில் 1.75 கிலோ மீற்றர் காப்பற் வீதியும் மீதமாக உள்ள 4.35 கிலோமீற்றர் வீதிக்கு கிரவலும் போடப்படவுள்ளது.
இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் உயர் அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், பிரதேச மக்கள் என பலரும் கலந்து கொண்டிருத்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

