வவுனியா காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்க தலைவிக்கு விளக்கமறியல் நீடிப்பு

Vavuniya Ranil Wickremesinghe Law and Order
By Thileepan Jan 08, 2024 09:40 AM GMT
Report

வவுனியாவில் ஜனாதிபதியின் வருகைக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்கத்தின் தலைவியான சி.ஜெனிற்றாவுக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

இதன்படி எதிர்வரும் 12 ஆம் திகதி வரை அவரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு வவுனியா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வவுனியாவுக்குக் கடந்த வெள்ளிக்கிழமை காலை வருகை தந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மாநகர சபை கலாசார மண்டபத்தில் அரச அதிகாரிகள் மற்றும் பொதுமக்களுடான கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார்.

தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள நீர் வடிகாலமைப்புச் சபையின் பொறியியலாளர்கள் சங்கம்

தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள நீர் வடிகாலமைப்புச் சபையின் பொறியியலாளர்கள் சங்கம்

கறுப்புக் கொடிகளை ஏந்தி போராட்டம்

ஜனாதிபதியின் விஜயத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து கலந்துரையாடல் இடம்பெற்ற மண்டபத்துக்குச் செல்லும் பாதையில் வடக்கு - கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்கத்தினர் கறுப்புக் கொடிகளை ஏந்தியவாறு தமது எதிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

வவுனியா காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்க தலைவிக்கு விளக்கமறியல் நீடிப்பு | Vavuniya Jenitas Remand Continue Protest

காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்கத்தின் தலைவியான சி.ஜெனிற்றாவுக்குப் போராட்டம் எதனையும் முன்னெடுப்பதற்கு நீதிவான் நீதிமன்றம் தடை விதித்திருந்த நிலையிலும் அவரும் போராட்டத்தில் கலந்துகொண்டிருந்தார்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஜனாதிபதியுடன் கலந்துரையாடுவதற்காக நிகழ்வு இடம்பெற்ற மண்டபத்துக்குள் செல்ல முற்பட்டபோது அவர்களைத் தடுத்து நிறுத்திய பொலிஸார், ஜனாதிபதியைச் சந்திப்பதற்கு அனைவருக்கும் அனுமதி வழங்க முடியாது என்றும், ஒருவருக்கு மாத்திரம் அனுமதி வழங்க முடியும் என்றும் தெரிவித்திருந்தனர்.

இதனை மறுத்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், அனைவரையும் அனுமதிக்குமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் முரண்பாடு ஏற்ப்பட்டது.

இதனையடுத்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவியான சி.ஜெனிற்றா மற்றும் போராட்டத்தை காணொளி எடுத்த மீரா ஜாஸ்மின் ஆகிய இருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

களுவாஞ்சிகுடியில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

களுவாஞ்சிகுடியில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

விளக்கமறியல் நீடிப்பு

கைது செய்யப்பட்ட இருவர் மீதும் நீதிமன்றக் கட்டளையை அவமதித்தமை, பொலிஸாரின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்தியமை, அமைதிக்குப் பங்கம் விளைவித்தமை போன்ற பல்வேறு குற்றச்சாட்டுக்களில் வவுனியா பொலிஸார் அவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோது காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்கத்தின் தலைவியான சி.ஜெனிற்றாவை எதிர்வரும் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும், போராட்டத்தை காணொளி எடுத்த பெண்ணுக்குப் பிணை வழங்கியும் வவுனியா நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

வவுனியா காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்க தலைவிக்கு விளக்கமறியல் நீடிப்பு | Vavuniya Jenitas Remand Continue Protest

இந்நிலையில், இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் தலைவியான சி.ஜெனிற்றாவை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோது, அவரைக் கைது செய்த நடவடிக்கையில் இரு பொலிஸார் மீது தாக்குதல் மேற்கொண்டு அவர்கள் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த காரணத்தினால் பொலிஸார் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டிலும், நீதிமன்ற உத்தரவை மீறிய குற்றச்சாட்டிலும் அவரை 12ஆம் திகதி வரை விளக்கமறியளில் வைக்குமாறு வவுனியா மாவட்ட நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மின் கட்டணத்தை குறைக்க உத்தரவிடக்கோரி சஜித் மனுத்தாக்கல்

மின் கட்டணத்தை குறைக்க உத்தரவிடக்கோரி சஜித் மனுத்தாக்கல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 


1ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லுவம், Toronto, Canada

13 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Warwick, England, United Kingdom

03 Sep, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சண்டிலிப்பாய், வவுனியா, Scarborough, Canada

13 Aug, 2025
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கச்சேரியடி, Paris, France, London, United Kingdom

13 Aug, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு

11 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வெள்ளவத்தை

12 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, கரவெட்டி, Montreal, Canada, திருகோணமலை

12 Sep, 2023
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

09 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு, London, United Kingdom

13 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, London, United Kingdom

12 Sep, 2010
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், Markham, Canada, Brampton, Canada

06 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Brisbane, Australia, Harrow, United Kingdom

06 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, மல்லாகம்

21 Aug, 2024
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, Gants Hill, United Kingdom

04 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனையிறவு இயக்கச்சி

07 Sep, 2020
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US