வவுனியா குடிவரவு - குடியகல்வு திணைக்கள பிராந்திய அலுவலகத்தில் திடீர் சோதனை
வவுனியாவில் அமைந்துள்ள குடிவரவு- குடியகல்வு திணைக்கள பிராந்திய அலுவலகத்தில் சுகாதார நடைமுறைகள் குறித்து சுகாதாரப் பிரிவினர் திடீர் கண்காணிப்பு சோதனை நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
வவுனியா, உள்வட்ட வீதியில் அமைந்துள்ள குடிவரவு - குடியகல்வு திணைக்களத்தில் அதிகளவிலான மக்கள் நிற்பதாகவும், சமூக இடைவெளி மற்றும் சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை எனவும் சுகாதாரப் பிரிவினருக்கு முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதனையடுத்து வவுனியா சுகாதாரப் பிரிவினர் குடிவரவு - குடியகல்வு திணைக்களத்தின் வவுனியா அலுவலகத்தில் இன்று (21.10) திடீர் கண்காணிப்பு சோதனை நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளனர்.
இதன்போது அதிகளவிலான மக்கள் சுகாதார நடைமுறைகளைப்
பின்பற்றாது நின்றதையடுத்து, குறித்த அலுவலக அதிகாரிகளுக்கு கோவிட்
அச்சுறுத்தல் தொடர்பில் தெளிவுபடுத்தியதுடன், அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டுள்ளன.