வவுனியா வைத்தியசாலையில் திடீர் சோதனை நடவடிக்கை
வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் பறக்கும் அணியினர் (Flying Squad ) திடீரென சோதனை நடவடிக்கையொன்றை முன்னெடுத்துள்ளனர்.
கொழும்பிலிருந்து வருகை தந்த பறக்கும் அணியினரே இச் சோதனை நடவடிக்கையினை நேற்று (6.10.2022) முன்னெடுத்துள்ளனர்.
இதன்போது, வைத்தியசாலையிலுள்ள தாதியர்கள், வைத்தியர்கள், பாெதுமக்கள், பணியாளர்கள் மற்றும் தாதிய பரிபாலகரின் கையொப்பம் அடங்கிய முக்கிய ஆவணங்களை சோதித்துள்ளனர்.
சோதனை செய்யப்பட்ட முக்கிய ஆவணங்கள்
இதன்போது, கடமைக்கு வரவேண்டிய தாதிய பரிபாலகர் நேற்றையதினம் இரவு நேர கடமைக்கு வரவில்லை என தெரியவந்துள்ளது.
அத்துடன், வவுனியா வைத்தியசாலையில் கடமைபுரியும் தாதிய பரிபாலகர் கடமையை சரிவர செய்வதில்லை எனவும், இரவு 10 மணிக்கு அவர்கள் வீட்டுக்கு செல்வது தொடர்பிலும் கண்டறியப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.