வவுனியாவில் பிடியளவு கமநில திட்டத்தின் ஊடாக உள்வாங்கப்பட்ட காணியில் மீள் பயிரிடல்
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் பிடியளவு கமநில செயல்திட்டத்தின் ஊடாக நொச்சிடோட்டை கிராமத்தில் வசதியும் ஒருவருடைய காணியினை பயன்பாட்டுக்கு கொண்டு வந்து பயிர்ச்செய்கை மேற்கொள்ளும் நடவடிக்கை நேற்று முன்னெடுக்கப்பட்டது.
கலந்து கொண்டோர்
இந்நிகழ்வு வவுனியா கமநல அபிவிருத்தி திணைக்கள உதவி ஆணையாளர் க.விமலரூபன் தலைமையில் இடம்பெற்றது.
மாவட்ட அரசாங்க அதிபர் சரத்சந்திர, மேலதிக மாவட்ட செயலாளர் (காணி) நா.கமலதாசன் மற்றும் கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், விவசாயிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது பிடியளவு நிலம் செயல்திட்டம் மூலமாக உள்வாங்கப்பட்ட காணியில் நிலக்கடலை (கச்சான்) விதைக்கும் செயற்பாடு பிரதம விருந்தினர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.





விபத்து நடைபெற்ற விமானத்தில் 2 மணி நேரத்திற்கு முன்பு பயணித்த பயணி முன்கூட்டியே எச்சரிக்கை News Lankasri

படிப்புன்னு வந்துட்டா இந்த ராசியினர் யாராலும் வெல்ல முடியாது... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
