மோடிக்கு அமெரிக்கா விடுத்துள்ள எச்சரிக்கை.. மிரட்டும் ட்ரம்ப் நிர்வாகம்
அமெரிக்க சந்தைகளில் இந்தியா வணிகம் செய்ய முடியாமல் போகும் என அமெரிக்க வர்த்தக செயலாளர் ஹோவர்ட் லுட்னிக் மிரட்டல் விடுத்துள்ளார்.
இந்தியா, அமெரிக்க சோளம் வாங்குவதில் எதிர்ப்பு தெரிவித்தால் இந்த முரண்பாட்டு நிலை ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில், "இந்தியா வரிகளை குறைக்க மறுத்தால் கடும் பின்னடைவை எதிர்கொள்ள நேரிடும். இந்தியா மீதான கோபத்தை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தாமாகவே குறைத்து வருகிறார்.
ரஷ்ய எண்ணெய் விவகாரம்
இந்தியா அமெரிக்காவுடன் வர்த்தகம் முன்னெடுப்பதுடன், அனைத்து வாய்ப்புகளையும் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறது. 1.4 பில்லியன் மக்கள் கொண்ட நாடு என கூறிக்கொள்ளும் இந்தியா, ஏன் அமெரிக்க சோளம் வாங்குவதில் தயங்குகிறது" என்று ஹோவர்ட் லுட்னிக் கேள்வி எழுப்பியுள்ளார்.
அமெரிக்கா உங்களை நடத்துவது போல, நீங்களும் வரிகளை குறைத்து அமெரிக்காவை சிறப்பாக நடத்த வேண்டும் என்றே ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் விளையும் சோளம் பெரும்பாலும் மரபணு மாற்றப்பட்டதாகும், இந்தியா மரபணு மாற்றப்பட்ட சோளத்தைப் பயன்படுத்துவதில்லை.
இந்தியாவும் அமெரிக்காவும் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை எட்டுவதற்கு நெருங்கி வந்த நிலையில், ரஷ்ய எண்ணெய் விவகாரத்தில் ட்ரம்ப் இந்தியா மீது வரிகளை விதித்தார்.
கடந்த சில வாரங்களாக, ட்ரம்பும் அவரது உயர் அதிகாரிகளும் ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதற்காக இந்தியாவை விமர்சித்து வருகின்றனர், மேலும் உக்ரைன் போருக்கு இந்தியா நிதியுதவி செய்வதாகவும் கூறி வருகின்றனர். ஆனால் அந்த குற்றச்சாட்டை இந்தியா மறுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



