கோவிட் சிகிச்சைக்காக 200 கட்டில்களை கொண்ட வவுனியா பொருளாதார மத்திய நிலையம் தயார்!
கோவிட் சிகிச்சைக்காக 200 கட்டில்களைக் கொண்டதாக வவுனியா பொருளாதார மத்திய நிலையம் தயார்ப்படுத்தப்பட்டுள்ளது.
நாட்டில் கோவிட் தொற்று தீவிரமாக அதிகரித்து வரும் நிலையில் நாட்டின் பல பகுதிகளிலும் கோவிட் சிகிச்சை மையங்களை அமைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அந்தவகையில், வவுனியா பொருளாதார மத்திய நிலையம் கோவிட் சிகிச்சை மையமாக மாற்றப்பட்டுள்ளது.
குறித்த பொருளாதார மத்திய நிலையத்தில் 200 கட்டில்கள் போடப்பட்டுள்ளதுடன், 200 கோவிட் நோயாளர்களைத் தங்க வைத்து சிகிச்சையளிப்பதற்கான ஏற்பாடுகளை இராணுவத்தினர் மற்றும் சுகாதார பிரிவினர் இணைந்து முன்னெடுத்துள்ளனர்.
இந்தநிலையில், வவுனியா பொருளாதார நிலையம் கோவிட் நோயாளர்களை உள்வாங்குவதற்குத் தயாரான நிலையில் தற்போது சிகிச்சை மையமாக மாற்றப்பட்டுள்ளது.






சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri

சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri
