வவுனியாவில் வீதி விபத்து; சிறுமி பலி - இருவர் படுகாயம்
வவுனியா ஈரப்பெரியகுளம் பகுதியில் மோட்டார் சைக்கிள் - முச்சக்கரவண்டி மோதுண்டு விபத்துக்குள்ளானதில் சிறுமி பலியாகியுள்ளதுடன், இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
இவ்விபத்து இன்று காலை 9.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா, ஈரப்பெரியகுளம் பகுதியிலிருந்து வவுனியா நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிளும், வவுனியா நகரிலிருந்து ஏ9 வீதி ஊடாக பயணித்த முச்சக்கரவண்டியும் ஈரப்பெரியகுளம் பகுதியில் மோதுண்டு விபத்துக்குள்ளானதில், சிறுமி ஒருவர் பலியானதுடன், இருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் விபத்து பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த விபத்துச் சம்பவத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த 10 வயதுடைய கல்குண்ணாமடுப்பகுதியை சேர்ந்த ஆகாசா ரசினி என்ற சிறுமியே இவ்வாறு பலியாகியுள்ளார்.
சிறுமியின் சடலம் பிரேதப்பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை ஈரப்பெரியகுளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.



ஏழ்மையின் உச்சத்தில் வாழ்ந்த நபர்... இன்று பிரித்தானிய பல்கலைக்கழகத்தில் உரையாற்ற அழைப்பு News Lankasri