வவுனியா - மகாறம்பைக்குளம் வீதிப்புனரமைப்பு பணிகள் ஆரம்பம்
வவுனியா - மகாறம்பைக்குளம், காளிகோவில் வீதி புனரமைக்கும் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த புனரமைக்கும் பணிகள் நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான கு.திலீபனினால் நேற்று(29.02.2024) ஆம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
வீதி புனரமைக்கும் பணிகள்
போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் இவ்வாண்டிற்க்கான 1500 கிலோ மீற்றர் வீதி புனரமைப்பு திட்டத்தின் கீழ் அந்த வீதி காபெற் வீதியாக புனரமைக்கப்படவுள்ளது.
அந்தவகையில் 1180 மீற்றர் நீளமுள்ள குறித்த வீதியின் புனரமைப்பிற்காக 27 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, அதன் புனரமைப்பு வேலைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான கு.திலீபன் முதன்மை அதிதியாக கலந்து கொண்ட இந்த நிகழ்வில், அரச அதிபர் பீ.ஏ.சரத்சந்திர, பிரதேச செயலாளர் நா.கமலதாசன், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
you may like this,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |











