யாழ்.வீதியில் வாள்வெட்டு தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது
வவுனியா - யாழ்.வீதியில் பயணித்த டிப்பரை வழி மறித்து அதன் சாரதி மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தி விட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்ற சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வவுனியா, திருநாவற்குளம் பகுதியில் இருந்து ஏ9 வீதி வழியாக நகரை நோக்கிச் சென்ற டிப்பர் வாகனத்தை நேற்றைய தினம் பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிலொன்றில் வந்த நபர்கள் யாழ்.வீதி சோயா லேன் பகுதியில் பயணித்த டிப்பரை வழிமறித்து அதன் சாரதி மீது வாள் வெட்டுத் தாக்குதல் மேற்கொண்டு தப்பி சென்றுள்ளனர்.
குறித்த வாள்வெட்டுத் தாக்குதலில் டிப்பர் சாரதி படுகாயமடைந்த நிலையில், வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த வவுனியா பொலிஸார், மோட்டார்
சைக்கிளில் வந்து தாக்குதல் மேற்கொண்டவர் என்ற சந்தேகத்தின் பேரில் அப்பகுதியை
சேர்ந்த நபர் ஒருவரை கைது செய்துள்ளதுடன், அவரிடம் மேலதிக விசாரணைகளை
முன்னெடுத்து வருகின்றனர்.