கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை: சந்தேகநபர்கள் தப்பியோட்டம்
புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேவிபுரம் பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்திக்கு தயாராக இருந்த கோடா, செப்பு சுருள்,பரல் என்பன இன்றைய தினம் கைப்பற்றப்பட்டுள்ளது.
பொலிஸ் விஷேட புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து புதுக்குடியிருப்பு பாெலிஸார் இன்றைய தினம் (05.11.2025) காலை தேவிபுரம் பகுதியில் மேற்காெண்ட சுற்றிவளைப்பில் கைப்பற்றப்பட்டுள்ளது.

புதுக்குடியிருப்பு பாெலிஸார் விசாரணை
இதன்பாேது கசிப்பு உற்பத்திக்கு தயாராக இருந்த 11,69,500 மில்லி லீற்றர் கோடா, செப்பு சுருள் , 7 பரல்கள் என்பன புதுக்குடியிருப்பு பாெலிஸாரினால் கைப்பற்றப்பட்ட நிலையில், கசிப்பு உற்பத்தி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சந்தேகநபர்கள் பொலிஸாரின் வருகையை உணர்ந்து தப்பியோடியுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சந்தேகநபர்களை தேடி வருவதாகவும், குறித்த சம்பவம் தாெடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பாெலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri
பிரித்தானியாவின் மிகப்பெரிய பணக்காரர் காலமானார்: வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கிய இந்தியர் News Lankasri
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam